2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார். இந்த இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களையும் பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவில் முதலீடு மற்றும் சுமார் 30 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் மாநிலத்தின் புதிய இடங்களிலும் தொழிற்பேட்டைகளை அமைத்து புதிய வேலைவாய்ப்புகளுக்காக ஏற்பாடுகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இயங்கி வருகிறது. அந்த வகையில் கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா அமையவுள்ளது.
3.41 ஏக்கர் பரப்பளவில் தங்க நகை தொழில் பூங்காவுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சிறு, குறு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. . கடந்த நவம்பர் மாதம் களவு ஆய்வுக்காக கோவையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.