தமிழ்நாடு

”எங்கள் மாநிலத்தின் வரிப் பணம் எங்கே?” : ஒன்றிய அரசை கேள்வி எழுப்பி சென்னையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்!

எங்கள் மாநிலத்தின் வரிப்பணம் எங்கே? என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பி சென்னையின் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

”எங்கள் மாநிலத்தின் வரிப் பணம் எங்கே?” : ஒன்றிய அரசை கேள்வி எழுப்பி சென்னையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர் அடுத்தநாள் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதேநேரம் எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. உதாரணத்திற்குத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மொத்தமே வெறும் ரூ. 2 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உத்தர பிரதேச மாநிலத்திற்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அநீதியைக் கண்டித்து கர்நாடகா, கேரள அரசுகள் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருப்புச் சட்டை அணிந்து ஒன்றிய அரசுக்கு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அதேபோல் ஒன்றிய பா.ஜ.க அரசு எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் அநீதி இழைத்து வரும் நிலையில் இந்திய அளவில் #BJPLootingOurTax என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது.

இந்நிலையில் எங்கள் மாநிலத்தின் வரிப்பணம் எங்கே? என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பி சென்னையின் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. இதில், "உங்களுக்குத் தெரியுமா தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து ஒன்றிய அரசு திருப்பித் தரும் வரி பகிர்வு வெறும் 26 பைசா." என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories