தமிழ்நாடு

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா : பெரியாரும் வைக்கம் போராட்டமும் நூலை வெளியிட்ட முதலமைச்சர்கள்!

“வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா : பெரியாரும் வைக்கம் போராட்டமும் நூலை வெளியிட்ட முதலமைச்சர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.12.2023) சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்”  நூற்றாண்டு சிறப்பு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை”  வெளியிட, கேரளா மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்கள்  பெற்றுக்கொண்டார். 

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததை நீக்கக் கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில் கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில் தந்தைப் பெரியார் அவர்கள் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்கு தலைமை ஏற்றார்.

பின்பு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை  ஒருங்கிணைத்து, அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துக்கள் மூலம் பிரச்சாரம் செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். வரலாற்று சிறப்பிக்க இந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகின்றது.

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா : பெரியாரும் வைக்கம் போராட்டமும் நூலை வெளியிட்ட முதலமைச்சர்கள்!

“வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டினையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கி ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்றும், போராட்டத்தின் வரலாற்றையும், வெற்றியையும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் சேர்ந்து கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 30.03.2023 அன்று விதி 110-இன் கீழ் 11 அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

சமூகநீதி வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த வைக்கம் போராட்டத்தினை தந்தைப் பெரியார் அவர்கள் முன்னின்று நடத்தி,  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எல்லைக் கடந்து போராடி வரலாற்றில் பல புரட்சிகளை நிகழ்த்தி காட்டி  வெற்றி கண்ட அவரின் நினைவைப் போற்றவும், அன்னாரின் சமூகநீதிக் கருத்துக்களை பின்வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ளவும்,  வைக்கம் போராட்டத்தின்  நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகளை பல்வேறு அறிஞர் பெருமக்களிடம் இருந்து பெற்று அதனைத் தொகுத்து “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” என்ற சிறப்பு மலர் ஒன்றினை தமிழ்நாடு அரசின், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரித்து வெளியிடப்படும் என்ற  ஒரு அறிவிப்பும் அதில் இடம்பெற்றிருந்தது. 

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைவராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள் துணைத் தலைவராகவும், இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு. த.மோகன், இ.ஆ.ப., அவர்கள் உறுப்பினர்-செயலராகவும்,  

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா : பெரியாரும் வைக்கம் போராட்டமும் நூலை வெளியிட்ட முதலமைச்சர்கள்!

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந.அருள், செய்தி மக்கள்  தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர், தமிழரசு அச்சக இணை இயக்குநர்(வெளியீடுகள்) இரா.அண்ணா, தமிழரசு அச்சக உதவி இயக்குநர் திருமதி அ.மகேஸ்வரி, தமிழரசு அச்சக உதவி பணி மேலாளர் தி.சுயம்புலிங்கம் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ் இணையக் கல்விக் கழக இணை இயக்குநர் கோமகன், மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன், தமிழறிஞர் பழ.அதியமான் ஆகியோர் ஆலோசகர்களாகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையால் இந்நூற்றாண்டு மலர் தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, இக்குழு ஆலோசனைகளின் பேரில்  தயாரிக்கப்பட்டுள்ள “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” என்ற சிறப்பு மலரினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார். 

தமிழ் கட்டுரைகள்

இந்நூற்றாண்டு மலரில், திரு.பழ.அதியமான் அவர்கள் எழுதிய ‘வைக்கம் போராட்ட கால நிரல்’, ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் வெற்றியைத் தழுவிய முதல் மனித உரிமைப் பேராட்டம்’,  திரு.வே.ஆனைமுத்து அவர்கள் எழுதிய ‘கேரளத்தில் ஏழு நாட்கள்’, திரு.வாலாசா வல்லவன் அவர்கள் எழுதிய ‘அன்று இருந்த சூழ்நிலைகள்’,  திரு.அ.கா.பெருமாள் அவர்கள் எழுதிய ‘பெரியாரும் சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டமும்’, திரு. பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய ‘வைக்கம் போராட்டம்-வரலாற்றுச் சாதனை’,  திரு.கோ.ரகுபதி அவர்கள் எழுதிய ‘சமத்துவத்துக்கான விவாதங்கள்’,  திரு.நிர்மால்யா அவர்கள் எழுதிய ‘டி.கே.மாதவனுடன் ஒரு தலித் போராட்ட நாயகன்’, திரு.ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய ‘வைக்கம் வீரர் மட்டுமல்ல, கேரள வீரர்’,  திரு.கி.தளபதிராஜ் அவர்கள் எழுதிய ‘விடை கொடுக்க மறுக்கும் வைக்கம் நினைவுகள்’,
திருமதி ஐஸ்வர்யா அவர்கள் எழுதிய ‘வைக்கத்தில் ஈரோட்டுப் பெண்கள்’ போன்ற தமிழ் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா : பெரியாரும் வைக்கம் போராட்டமும் நூலை வெளியிட்ட முதலமைச்சர்கள்!

மலையாள கட்டுரைகள்

முனைவர் டி.டி.ஸ்ரீகுமார் அவர்கள் எழுதிய ‘வைக்கம் சத்தியாகிரகத்தின் நூறு வருடங்கள்’,  திரு.ரவி வர்மா தம்புரான் அவர்கள் எழுதிய ‘கேரள மறுமலர்ச்சியில் தமிழ் மரபின் வேர்கள்-வைக்கம் சத்தியாகிரகம் பின்னணியில் ஒரு பார்வை’,  முனைவர் சுரேஷ் மாதவ் அவர்கள் எழுதிய ‘சிற்றேடத்து சங்குப் பிள்ளை-வைக்கம் சத்தியாகிரகத்தின் முதல் ரத்த சாட்சி’,  திரு.கே.கே.கொச்சு அவர்கள் எழுதிய ‘வைக்கம் சத்தியாகிரகம்-சாதி எதிர்ப்பும் பெரியாரும்’, முனைவர் ஓ.கே.சந்தோஷ் அவர்கள் எழுதிய ‘வைக்கம் சத்தியாகிரகம்-வரலாறும் சமகாலமும்’, முனைவர் எஸ். ஷாஜி அவர்கள் எழுதிய ‘சாதியமைப்பும் வைக்கம் சத்தியாகிராகமும்’  போன்ற மலையாள மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் மலையாள கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. 

ஆங்கிலக் கட்டுரைகள்

Thiru. Robin Jeffrey அவர்கள் எழுதிய ‘Temple entry Movement in Travancore, 1860-1940’, V.Balambal அவர்கள் எழுதிய ‘E.V.R and Vaikom
Satyagraha’, Dr.T.K.Ravindran அவர்கள் எழுதிய ‘Eight Furlongs of Freedom’, Mary Elizabeth King அவர்கள் எழுதிய ‘Gandhian Nonviolent Struggle and Untouchability in South India-The 1924-1925 Vaikom Satyagraha and Mechanisms  of Change’, 
Thiru. Sunny M.Kapikkad அவர்கள் எழுதிய ‘Vaikom struggle-Historical Significance of Thanthai  Periyar’, Thiru. Pazha Athiyaman அவர்கள் எழுதிய ‘Gandhi at Vaikom’ மற்றும் ‘Periyar the Hero of Vaikom’, Thiru. K.A.Shaji அவர்கள் எழுதிய ‘Vaikom Satyagraha-Thanthai Periyars role பினராயி விஜயன் அவர்களும் மலர்வளையம்  வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

banner

Related Stories

Related Stories