தமிழ்நாடு

இது என் ஊரு என் மக்கள் : விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

இது என் ஊரு, என் மக்கள் என விமர்சனங்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது என் ஊரு என் மக்கள் : விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரக்கால உதவிகளை வழங்கிடவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, எஸ். ஞானதிரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து வேண்டும் என்றே சிலர் சமூக ஊடகத்தில் இயக்குநர் மாரி செல்வராஜை விமர்சனம் செய்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அதில், "இது என் ஊரு. என் மக்கள். அண்ணா அம்மாவ காணும், அப்பாவ காணும் எங்களை காப்பாத்துங்கணு போன்பண்ணி மொத்த ஊரும் கதறும்போது என்னால என்ன செய்ய முடியுமோ அதை நான் செஞ்சிட்டு இருக்கேன்.

அதெல்லாம் உணர்ந்தாதான் புரியும். மீண்டும் நான் சென்னைக்கு போனாதான் இயக்குநர். இதுவரைக்கும் இந்த ஊரில் ஒருத்தன்தான் நான். இந்த மக்கள் என்னை நம்புறதுதான் என்னோட பலம். அதுக்காகவாது நான் எதாச்சி செய்யணும். களத்துல நான் இருந்தேன். அமைச்சர் உதயநிதிக்கு நான் கால் பண்ணிக் கூப்பிட்டேன். அவரும் என்னோட கதறலக்கு கேட்டதும் சேலதுல இருந்து உடனே கிளம்பி வந்துட்டாரு. எங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைச்சது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories