தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் எதிரொலி : அவசர எண்ணுடன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மின்சார வாரியம் : முழு விவரம் !

மிக்ஜாம் புயல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்து வழிகாட்டுதல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் எதிரொலி : அவசர எண்ணுடன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மின்சார வாரியம் : முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு மக்களுக்காக துரித நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் வரும் டிச. 3 (நாளை), 4, 5 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் டிசம்பர் 4-ம் தேதி மிக்ஜாம் புயல் தெற்கு ஆந்திரா - வட தமிழகத்தில் சென்னைக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 5-ம் தேதி காலை கரையை கடக்கும் என்றும், இந்த மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் எதிரொலி : அவசர எண்ணுடன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மின்சார வாரியம் : முழு விவரம் !

இதையடுத்து புயல், கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

* மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

* சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகே தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

* தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.

மிக்ஜாம் புயல் எதிரொலி : அவசர எண்ணுடன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மின்சார வாரியம் : முழு விவரம் !

* ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.

* மின்வயர் இணைப்புகளை திறந்த நிலையில் இல்லாமல், இன்சுலேசன் டேப் (Insulation Tape) சுற்றி வெளிபுற மின் காப்பு செய்யவும்.

* வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

* மின்சார கசிவு, மின் அதிர்ச்சி ஏற்படும் நிகழ்வில் உடனே அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். மின் வாரியத்தின் 24 மணி நேர சேவைக்காக 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

banner

Related Stories

Related Stories