தமிழ்நாடு

”என்.சங்கரய்யா தியாகப் பெருவாழ்வை என்றும் போற்றுவோம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யா தியாகப் பெருவாழ்வை என்றும் போற்றுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”என்.சங்கரய்யா தியாகப் பெருவாழ்வை என்றும் போற்றுவோம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாகத் திங்களன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து சங்கரய்யா மறைவுக்குக் கட்சி தொண்டர்கள் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் மாலை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சங்கரய்யா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யா தியாகப் பெருவாழ்வை என்றும் போற்றுவோம் என சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதில், "விடுதலைப் போராட்ட வீரர் - இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவர் - கலைஞர் அவர்களின் உற்ற நண்பர், தோழர் சங்கரய்யா அவர்கள் மறைவுற்றதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுடலுக்கு இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம்.

தோழர் சங்கரய்யாவை பிரிந்துவாடும் இடதுசாரி இயக்கங்களின் தோழர்கள் - அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொண்டோம். கொள்கை உறுதியும் - தீரமும் கொண்டிருந்த தோழர் அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கி கழக அரசு கவுரவித்தது. அவருக்கு வழங்கப்படவிருந்த முனைவர் பட்டத்தை சூழ்ச்சியால் தடுத்தவர்கள் குற்றவுணர்வு கொள்ளும் வகையில், அவரது சாதனைகள் உயர்ந்து நிற்கின்றன. பெரியவர் சங்கரய்யா அவர்களுடைய தியாகப் பெருவாழ்வை என்றும் போற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories