தமிழ்நாடு

தமிழக மாணவர் எரித்து கொலை : உரிய நடவடிக்கை கோரி ஜார்க்கண்ட் முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

ஜார்க்கண்டில் எரித்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவர் மதன் குமார் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மாணவர் எரித்து கொலை : உரிய நடவடிக்கை கோரி ஜார்க்கண்ட் முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆர்ஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. புகழ் பெற்ற இந்த கல்லூரியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த சூழலில் இங்கு படித்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மதன் குமார் (28) என்ற இளைஞர், இந்த கல்லூரியில் முதுநிலை தடயவியல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த சூழலில் சம்பவத்தன்று மதன் குமார் காணாமல் போன நிலையில், சில மணி நேரத்திலேயே அவரது விடுதிக்கு பின்புறத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக மாணவர் எரித்து கொலை : உரிய நடவடிக்கை கோரி ஜார்க்கண்ட் முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மதன் குமார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணையை தொடங்கினர். அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மதன் குமார் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு, பின்னர் அவரது உடலை எரிக்க முயன்ற சம்பவம் தெரியவந்தது. மேலும் விடுதியின் மேற்கூரையில் மொபைல் மற்றும் கால்தடங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த விவகாரம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது உயிரிழந்த மதன் குமார் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, 3 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார். அதோடு இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு பின்வருமாறு :

தமிழக மாணவர் எரித்து கொலை : உரிய நடவடிக்கை கோரி ஜார்க்கண்ட் முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

"நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் ம.மதன்குமார் (வயது 28) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இராஜேந்திரா மருத்துவக் கல்லூரியின் (Rajendra Institute of Medical Sciences) விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்து வந்த நிலையில், ம.மதன்குமார் காணாமல் போய், பின்னர் அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக அவர் தங்கியிருந்த விடுதியின் பின்புறத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன்.

உடனடியாக தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் ஜார்க்கண்ட மாநில அரசுடன் தொடர்பு கொண்டு ம.மதன்குமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொண்டதன் அடிப்படையில், அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரால் அஞ்சலி செலுத்தப்பட்டு, இன்று காலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழக மாணவர் எரித்து கொலை : உரிய நடவடிக்கை கோரி ஜார்க்கண்ட் முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

மேலும், ம.மதன்குமார் மர்மான முறையில் இறந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரமான சூழ்நிலையில், ம.மதன்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், ம.மதன்குமார் இறந்தது குறித்து உரிய விசாரணையை விரைந்து மேற்கொண்டு, அவரது இறப்பிற்கு நீதி கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் நான் கடிதம் மூலம் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களை வலியுறுத்தியுள்ளேன்."

banner

Related Stories

Related Stories