தமிழ்நாடு

இறப்பிலும் பிரியாத தம்பதி.. கணவன் இறந்த உடலைப் பார்த்து மனைவியும் உயிரிழப்பு!

மயிலாடுதுறை அருகே ஒரே நாளில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பிலும் பிரியாத தம்பதி..  கணவன் இறந்த உடலைப் பார்த்து மனைவியும் உயிரிழப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மயிலாடுதுறை மாவட்டம், நில்லத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி மருதாம்பாள். இந்த தம்பதிக்குத் திருமணமாகி 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இவர்களுக்குத் திருமணம் நடந்த நாளிலிருந்து இணை பிரியாமல் ஒன்றாக தங்களது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இவரது இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது கணவன் உடலைப் பார்த்து மனைவி மருதாம்பாள் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தார்.

அப்போது அவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று பரிசோதனை செய்தபோது அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரது உடலுக்கும் இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து தம்பதிகள் உயிரிழந்தது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories