தமிழ்நாடு

தோண்ட தோண்ட கிடைக்கும் பொக்கிஷம்.. வெம்பக்கோட்டையில் அகழாய்வில் ஆண் உருவ பொம்மை கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தோண்ட தோண்ட கிடைக்கும் பொக்கிஷம்.. வெம்பக்கோட்டையில்  அகழாய்வில் ஆண் உருவ பொம்மை கண்டெடுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அகழாய்வில் நூற்றாண்டுகள் பழமையான பொக்கிஷங்கள் கொண்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. கீழடியில் நடைபெறும 9ஆம் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணம் மற்றும் யானை உருவம் பொறித்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆண் உருவ பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தோண்ட தோண்ட கிடைக்கும் பொக்கிஷம்.. வெம்பக்கோட்டையில்  அகழாய்வில் ஆண் உருவ பொம்மை கண்டெடுப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன், தங்கப்பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல்விளக்கு, காதணி, எடைகள், பதக்கம், கண்ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், யானை தந்ததால் ஆன பகடை, செங்கல், சில்லு வட்டம் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிறத்துடன் வனையப்பட்டுள்ளது. தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது. கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள்ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்கப்பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories