தமிழ்நாடு

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” - யார் யார் விண்ணப்பிக்கலாம்?.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” - யார் யார் விண்ணப்பிக்கலாம்?.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகைக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த திட்டமானது அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' பயன்பெறும் வகையில் இன்று வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. முழு விவரம் பின்வருமாறு :

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” - யார் யார் விண்ணப்பிக்கலாம்?.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

>> விண்ணப்பிக்கும் நடைமுறைகள் -

1) குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2) இத்திட்டதிற்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

3) ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” - யார் யார் விண்ணப்பிக்கலாம்?.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

>> “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” - யார் யார் பெறலாம் ?:

* குடும்பத்தலைவி வரையறை -

1) குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.

2) ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

3) குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” - யார் யார் விண்ணப்பிக்கலாம்?.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

4) குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்.

5) திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

6) ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” - யார் யார் விண்ணப்பிக்கலாம்?.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

* பொருளாதாரத் தகுதிகள் -

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களைக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

1) ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

2) ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

3) ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.

banner

Related Stories

Related Stories