தமிழ்நாடு

”பாசிச பா.ஜ.கவினால் தி.மு.கவை அசைத்துக்கூட பார்க்க முடியாது”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனல் பேச்சு!

எத்தனை மோடிகள், அமித்ஷாக்கள் வந்தாலும் பாசிச பா.ஜ.க வினால் தி.மு.கவை அசைத்துக்கூட பார்க்க முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.

”பாசிச பா.ஜ.கவினால் தி.மு.கவை அசைத்துக்கூட பார்க்க முடியாது”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனல் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டில் நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்பை பெற்று தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஜல்லிக்கட்டு வெற்றி உங்கள் வெற்றி. தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை உணர்வுதான் மூடப்பட்ட ஜல்லிக்கட்டு வாடிவாசல் திறக்கச்செய்தது.

”பாசிச பா.ஜ.கவினால் தி.மு.கவை அசைத்துக்கூட பார்க்க முடியாது”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனல் பேச்சு!

எத்தனை அமித்ஷாகள், எத்தனை மோடிகள் வந்தாலும் தி.மு.க கழகத்தை அசைசைத்துக் கூடப்பார்க்க முடியாது. அ.தி.மு.கவை ஏதோ பா.ஜ.கவோட கிளை மாதிரி அடிமைப்படுத்திய மோடிய எதிர்த்து பேச வேண்டாம், குறைஞ்சபட்சம் மூச்சு கூட விடாதவர் தான் எடப்பாடி பழனிசாமி.

எல்லாரும் அ.தி.மு.கக்காரன் மாதிரி இருக்க மாட்டாங்க அப்படிங்கிறதுக்கு உதாரணம் தான் ஜல்லிக்கட்டு போராட்டம். அ.தி.மு.க அந்த போராட்டத்தை ஒடுக்க நினைச்சப்ப, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதே, அதற்கு முழு ஆதரவை கொடுத்தவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

தமிழ்நாட்டுக்கு ஒருத்தர் வந்திருக்கார். அவருக்கு உள்ள வேலையை தவிர மீதமிருக்க எல்லா வேலையையும் செய்வாரு. நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும். மனிதர்களை இவர் தாழ்ந்தவர் – இவர் உயர்ந்தவர்னு சொல்ற சனாதானத்தை தூக்கி பிடிக்கிறது. மாநிலத்துக்கெல்லாம் கலாச்சாரமே இல்லைன்னு கதைவிடுறது. குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறதுன்னு தமிழ்நாட்டையே பின்னோக்கி இழுத்துட்டு இருக்காரு.

”பாசிச பா.ஜ.கவினால் தி.மு.கவை அசைத்துக்கூட பார்க்க முடியாது”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனல் பேச்சு!
”பாசிச பா.ஜ.கவினால் தி.மு.கவை அசைத்துக்கூட பார்க்க முடியாது”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனல் பேச்சு!

திமுக இல்லைன்னா எளிதா தமிழ்நாட்டை அபகரிச்சுடலாம்னு நினைக்கிறாங்க. ஆனால் அது ஒருபோதும் நடக்காது. திமுக பல லட்சம் தொண்டர்களோட ரத்தத்தால, வியர்வையால, உருவான இயக்கம்.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தி.மு.கழகத்தின் கிளைச் செயலாளரைக்கூட அவர்களால ஒன்னும் செய்ய முடியாது. ரெய்ட் விட்டு, சோதனை நடத்தி அடிமையாக்குறதுக்கு நாங்க ஒன்னும் அ.தி.மு.க இல்ல. நம்முடைய தலைவர்களோட நூற்றாண்டுகளை மக்கள் பயன்படுகிற வகையில கொண்டாடுறோம். ஆனா, எம்.ஜி.ஆர் நூற்றாண்டுக்கு ஒரே ஒரு ஆர்ச் கட்டியது தான் அடிமைகள் செஞ்ச சாதனை.

ஒரு மாநிலத்தில ஜெயிக்கணும்னா, அம்மாநில மக்களின் நம்பிக்கையை பெறணும்.அதை விட்டடுட்டு ஒன்னு செங்கோல் நடுறேன்னு கிளம்புறீங்க. இல்லைன்னா, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை அனுப்புறீங்க.

பாராளுமன்றத்துல செங்கோல் வச்சா தமிழ்நாட்டுல ஓட்டு போட்டுருவாங்கன்னு யார் சொன்னதுன்னு தெரியல. குடியரசுத் தலைவர் பதவியிலே இருந்தாலும் அவர்கள் எல்லாம் பாஜகவைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள். இது தான் அவர்களின் சனாதன மாடல் – ஆரிய மாடல்.

மனிதர்கள் எல்லாரும் சமம்னு சொல்ற திராவிட மாடலையும். தி.மு.க.வையும் கண்டா ஆரிய மாடலை தூக்கி பிடிக்கிறவங்களுக்கு எப்படி பிடிக்கும். 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளுடைய எஜமாணவர்களான பாசிச பா.ஜ.க கும்பலை விரட்டி விரட்டி அடிப்போம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories