தமிழ்நாடு

பைக் மீது மோதிய லாரி.. கணவன் கண் முன்னே 3 மாத கர்ப்பிணி மனைவிக்கு நடந்த துயரம்: சோகத்தில் குடும்பம்!

சென்னை அருகே சாலை விபத்தில் கணவன் கண் முன்னே கர்ப்பிணி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பைக் மீது மோதிய லாரி.. கணவன் கண் முன்னே 3 மாத கர்ப்பிணி மனைவிக்கு நடந்த துயரம்: சோகத்தில் குடும்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது கணவர் அஜித். இந்நிலையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் இரும்பு கழிவுகளைச் சேகரிப்பதற்காக பட்டமந்திரி பகுதிக்குச் சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். மீஞ்சூர் அருகே வந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், ஐஸ்வர்யா லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பைக் மீது மோதிய லாரி.. கணவன் கண் முன்னே 3 மாத கர்ப்பிணி மனைவிக்கு நடந்த துயரம்: சோகத்தில் குடும்பம்!

மேலும் கணவர் அஜித்திற்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந்த ஜஸ்வர்யா உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மூன்று மாத கர்ப்பிணி மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories