தமிழ்நாடு

சுத்தம் செய்ய அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்.. ஆலை கழிவுகளை அரசே அகற்றுவதாக ‘செக்’ வைத்த தமிழ்நாடு அரசு !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே செய்ய உள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.

சுத்தம் செய்ய அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்.. ஆலை கழிவுகளை அரசே அகற்றுவதாக ‘செக்’ வைத்த தமிழ்நாடு அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடி ஐந்து ஆண்டுகளான நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும், பசுமை வளாகத்தை பராமரிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

சுத்தம் செய்ய அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்.. ஆலை கழிவுகளை அரசே அகற்றுவதாக ‘செக்’ வைத்த தமிழ்நாடு அரசு !

இது தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வேதாந்தா நிறுவனம் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த மே 4ஆம் தேதி விசாரித்தது.

இதனிடையே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர் இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளது.

சுத்தம் செய்ய அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்.. ஆலை கழிவுகளை அரசே அகற்றுவதாக ‘செக்’ வைத்த தமிழ்நாடு அரசு !

பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்க உத்தரவிட்டுள்ளது . ஆலை கழிவுகளை அகற்றுபவர்கள் பக்கவாட்டில் உள்ள வாசலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல ஸ்டெர்லைட் நிர்வாகம் வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக கூடுதல் இயக்குனர், மாசு கட்டுப்பாரி வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தீயணைப்புத்துறை அதிகாரி, தூத்துக்குடி நகராட்சி செயற் பொறியாளர், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர், வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சுத்தம் செய்ய அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்.. ஆலை கழிவுகளை அரசே அகற்றுவதாக ‘செக்’ வைத்த தமிழ்நாடு அரசு !

இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருக்கின்ற ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும், பசுமை வளாகத்தை பராமரிக்க கூறியிருக்கின்றனர். அதை செயல்படுத்துவதற்கு விரிவான அறிக்கை தயார் செய்து 9 பேர் கொண்ட குழு அமைத்திருக்கின்றோம்.

அதில் சார் ஆட்சியர் தலைமையில், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக கூடுதல் இயக்குனர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தீயணைப்புத்துறை அதிகாரி மற்றும் 9 பேர் கொண்ட குழு உள்ளது.

சுத்தம் செய்ய அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்.. ஆலை கழிவுகளை அரசே அகற்றுவதாக ‘செக்’ வைத்த தமிழ்நாடு அரசு !

இந்த கமிட்டி ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கின்ற கழிவுகளை அப்புறப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வார்கள். மேலும், இந்த கழிவுகளை அகற்ற எவ்வளவு நாட்கள் தேவைப்படும். என்னென்ன மாதிரியான மெட்டீரியல்ஸ் தேவைப்படும், இந்த பணி மேற்கொள்ளப்படும் போது ஸ்டெர்லைட் ஆலையில் நடக்கும் நிகழ்வு, சிசிடிவி கேமரா அங்கு பொருத்தப்பட்டு லைவாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிக்கப்படும்.

மேலும், 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையும் ஆட்சியரிடம் விரிவான ஆய்வறிக்கையை அளிப்பார்கள். இந்த கழிவுகளை உச்ச நீதிமன்றம் கூறியது போல கழிவுகளை எடுத்து அகற்றும் பணி நடைபெறும். இனிவரும் காலங்களில் உச்சநீதிமன்ற ஆணையை பின்பற்றும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும்” என தெரிவித்தார்

banner

Related Stories

Related Stories