தமிழ்நாடு

”கைதட்டலுக்காகப் பேசுபவர்களுக்கு இது தெரியாது”.. அண்ணாமலைக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

கைதட்டலுக்காகப் பேசுபவர்களுக்கு இது தெரியாது என பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

”கைதட்டலுக்காகப் பேசுபவர்களுக்கு இது தெரியாது”.. அண்ணாமலைக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில், ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், அச்சங்கங்கள் நாளொன்றுக்கு 35 இலட்சம் லிட்டர் பாலினை 4.5 இலட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்து வருகின்றன. இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

”கைதட்டலுக்காகப் பேசுபவர்களுக்கு இது தெரியாது”.. அண்ணாமலைக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

இதுபற்றி அறிந்த உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலைப் பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, 'அமித்ஷாவுக்கு இப்படி யாரும் தவறான கடிதத்தை எழுதி இருக்க மாட்டார்கள்' என முதலமைச்சரின் கடிதத்தை கொச்சைப்படுத்தியுள்ளார். இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இரு மாநில உரிமைகளுக்கிடையே எழும் பிரச்சனைகளை ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று முடிவு எடுப்பது நடைமுறை. இது கைதட்டலுக்காக மட்டும் பேசுபவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை" என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories