தமிழ்நாடு

ஒரே வீட்டில் சிக்கிய 200 ஆண்டுகள் பழமையான 55 சிலைகள்.. அதிரடி ரெய்டு செய்து மீட்ட அதிகாரிகள் !

ஒரே வீட்டில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகளை சிலை தடுப்பு பிரிவினர் மீட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே வீட்டில் சிக்கிய 200 ஆண்டுகள் பழமையான 55 சிலைகள்.. அதிரடி ரெய்டு செய்து மீட்ட அதிகாரிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 பழமையான கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி முத்துராஜ் தலைமையிலான அதிகாரிகள் மீட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு செய்திகளை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வீட்டின் உரிமையாளர் அமெரிக்காவில் உள்ள நிலையில், அவரது வீட்டில் அதிரடி சோதனை செய்து அதிகாரிகள் சிலைகளை மீட்டுள்ளனர். இங்கு மீட்கப்பட்ட 55 புராதான சிலைகளும் ஒன்பதாவது, பத்தாவது நூற்றாண்டில் உள்ள சிலைகள் ஆகும். இவைகள் அனைத்தும் கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் என்று ஆய்வு மூலமாக தெரிய வந்துள்ளது. இதில் ஒரு சில சிலைகள் வட இந்தியாவை சேர்ந்தவைகளாக இருக்கலாம், ஒரு சில சிலைகள் தென்னிந்திய சிலைகளாக கூட இருக்கலாம்.

ஒரே வீட்டில் சிக்கிய 200 ஆண்டுகள் பழமையான 55 சிலைகள்.. அதிரடி ரெய்டு செய்து மீட்ட அதிகாரிகள் !

இதுவரை 301 வழக்குகள் கண்டுபிடிக்காமல் புலன் விசாரணையில் உள்ளது. இவைகள் அனைத்தும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யப்படுகிறது. இவைகள் அனைத்தும் கலை அம்சத்துடன் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் என்று சூர்யா அவர் வழக்கு விசாரணையில் இருந்த அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அரியலூர் மாவட்ட அருள்மிகு வரதராஜன் பெருமாள் கோவிலில் உள்ள சிலையை அமெரிக்காவில் கடத்தப்பட்டதாக தெரியவந்தது. இவைகளை தொடர்பு கொண்டு இந்த சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருவதில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து நிறைய சிலைகளை கொண்டு வந்தோம். 13 சிலைகளை மீட்டுள்ளோம். அந்த 13 சிலையில் 12 சிலைகளை ஒப்படைத்து விட்டோம்.

ஒரே வீட்டில் சிக்கிய 200 ஆண்டுகள் பழமையான 55 சிலைகள்.. அதிரடி ரெய்டு செய்து மீட்ட அதிகாரிகள் !

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மிக சிறப்பாக செயல்பட்டு 100க்கும் மேற்பட்ட சிலைகளை ஒப்படைத்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிக பழமையான தொன்மையான சிலைகளை பாதுகாப்பாக வைத்துள்ளோம், போலீஸ் பாதுகாப்புடன் சிசிடிவி கேமரா பாதுகாப்புடன் இவைகளை பாதுகாத்து வருகிறோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 249 சிலைகளை இணையதளத்தில் பதிவு செய்து பொதுமக்கள் பார்வைகளுக்கு தகவலுடன் பதிவு செய்து இருக்கிறோம்.

எங்களுடைய நோக்கம் இந்த சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது அங்கு சென்று அடைய வேண்டும் என்பதுதான். இங்கே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இந்த 55 சிலைகளை கண்டுபிடித்தது பெரிய சாதனை சிறப்புமிக்க புராதானமான பழமை வாய்ந்த சிலைகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளோம்.

ஒரே வீட்டில் சிக்கிய 200 ஆண்டுகள் பழமையான 55 சிலைகள்.. அதிரடி ரெய்டு செய்து மீட்ட அதிகாரிகள் !

சர்வதேச ஒப்பந்தம் அடிப்படையில் இந்த சிலைகள் எங்களின் ஒப்பந்தத்தை அடிப்படையில் இது எங்களது சிலை தான் என்று நிரூபித்து நாங்கள் மீட்டு வருகிறோம். இது போன்ற பழமை வாய்ந்த சிலைகள் என்று தெரிந்தால் பொதுமக்களும் தகவல் தெரிவிக்க வேண்டும், இதுபோன்ற பாரம்பரிய எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இது போன்ற விஷயங்கள் பொதுமக்கள் கருத்தில் கொண்டு தகவல் அளிக்க வேண்டும்.

இவைகளுக்கு விலை மதிப்பு இல்லை. சர்வதேச சந்தைகளுக்கு அதற்கு ஏற்றாக்குள் விலைகள் அவர்களே நியமித்துக் கொள்கிறார்கள். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆரம்பித்ததில் இருந்து 576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுது மிக சுலபமாக திருட முடியாது என்று சூழ்நிலை இருப்பதினால் இப்பொழுது சிலை கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த சிலைகள் கூட வழக்குகள் இல்லை. ஆனால் நாங்கள் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம் தமிழ்நாட்டில் சிலைகளுக்கு நல்ல பாதுகாப்பு இருக்கிறது" என்றார்.

banner

Related Stories

Related Stories