தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி மசோதா: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: மீண்டும் ஒரு சம்பவம் செய்த மு.க.ஸ்டாலின்

இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் RN ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி மசோதா: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: மீண்டும் ஒரு சம்பவம் செய்த மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளினால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். இது தற்கொலை மட்டுமல்லாமல் கொலையிலும் முடிகிறது. இந்த சூதாட்டத்தால் பல உயிர்கள் பலி வாங்கியுள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலையும் பெறுவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மி மசோதா: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: மீண்டும் ஒரு சம்பவம் செய்த மு.க.ஸ்டாலின்

இந்த அவசரச் சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பிவைத்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ந் தேதியன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது அந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்குவதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஒப்புதல் தராமல் தாமதப்படுத்துவதாக கருதிய நிலையில், நேரில் ஆளுநரை சந்திக்கவும் அரசு தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. இந்த சூழலில் நவம்பர் 24 ம் தேதி ஆளுநர் தரப்பில் இருந்து சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பட்டது.

ஆன்லைன் ரம்மி மசோதா: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: மீண்டும் ஒரு சம்பவம் செய்த மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசும் அதே மாதம் 25-ம் தேதி அதாவது 24 மணி நேரத்திற்குள் விளக்கமும் அளித்தது. ஆனாலும், மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் தாமதப்படுத்தியதோடு, ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் தொடர் தற்கொலைகள் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் தமிழ்நாடு அரசு பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி மசோதா: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: மீண்டும் ஒரு சம்பவம் செய்த மு.க.ஸ்டாலின்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக கடந்த ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், அதற்கு பதிலாக புதிய சட்டத்தை இயற்றுங்கள் என்று நீதிமன்றமே அனுமதி அளித்திருந்த நிலையில், என்னென்ன காரணங்களுக்காக அந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ததோ, அதற்கு பதிலாக புதிய சரத்துகளை உள்ளடக்கி புதிய சட்டத்தை இயற்றியதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

ஆன்லைன் ரம்மி மசோதா: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: மீண்டும் ஒரு சம்பவம் செய்த மு.க.ஸ்டாலின்

ஆன்லைன் ரம்மியால் விலைமதிப்பில்லா உயிர்கள் போவதை தடுத்து காப்பாற்ற, அடுத்த கட்ட முயற்சியாக மீண்டும் சட்டப்பேரவையில் மசோதாவை தாக்கல் செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20 தேதி தொடங்கியது. தொடர்ந்து 23-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரின் போது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார்.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. பின்னர் மீண்டும் ஆளுநருக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சூழலில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி மசோதா: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: மீண்டும் ஒரு சம்பவம் செய்த மு.க.ஸ்டாலின்

முன்னதாக ஆளுநர் தொடர்பான விவகாரத்துக்கு எதிராக இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆளுநர் தொடர்பாக பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதியை தளர்த்துவதற்கான தீர்மானம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 144 உறுப்பினர்கள் ஆதரவுடன் இன்று நிறைவேறியது.

ஆன்லைன் ரம்மி மசோதா: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: மீண்டும் ஒரு சம்பவம் செய்த மு.க.ஸ்டாலின்

மேலும் அதில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் இன்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த தடை மசோதா அமலுக்கு வரவுள்ளது.

இனி இந்த மசோதாவுக்கான சட்ட வரையறை விதிக்கப்பட்டு அந்த சட்ட அதிகாரபூர்வமாக அமலுக்கு வரும். ஆன்லைனில் ரம்மி விளையாடினால், ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் தண்டனைகள் குறித்த முக்கிய வழிவகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories