தமிழ்நாடு

சிறைவாசிகளுக்கு எழுத்தறிவுத் திட்டம்.. பேரவையில் 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 26 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

சிறைவாசிகளுக்கு எழுத்தறிவுத் திட்டம்.. பேரவையில் 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பள்ளி கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில் 26 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

1. உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் 2996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.175 கோடி செலவில் அமைக்கப்படும்.

சிறைவாசிகளுக்கு எழுத்தறிவுத் திட்டம்.. பேரவையில் 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்!

2. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ரூ.150 கோடி மதிப்பீட்டில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

3. மாதிரிப் பள்ளிகள் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

4. அரசு பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாபெரும் வாசிப்பு இயக்கம் ரூ.10 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

5. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்புப் பள்ளிகள் ரூ.9 கோடி செலவில் உருவாக்கப்படும்.

6. வேலை வாய்ப்பின் காரணமாக தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வரும் பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களின் தாய் மொழியுடன் தங்கு தடையின்றி தமிழில் பேசவும், எழுதவும் ஏதுவாக தமிழ் மொழி கற்போம் என்ற திட்டம் தொடக்கப்படும்.

7. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பாக முறையில் நடத்தப்படும். இதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும்.

8. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பணிகளைத் திறம்பட முன்னெடுத்துச் செல்லும் வகையில் அவர்களுக்கு நிருவாகத்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.

9. 6 முதல் 8 வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று எனக் குறைந்தபட்சம் 5 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் வழங்கப்படும்.

10. எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த ரூ.8 கோடி மதிப்பீட்டில் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படும்.

11. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 15 நாள் கற்றல் கற்பித்தல் பயிற்சிகள் வழங்கப்படும்.

12. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளுக்குத் தேவையான ஆய்வகங்கள் ரூ.10 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

13. மேல்நிலைப் பள்ளிகளில் வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிப்படியாக மூன்றாம் பாடப்பிரிவு உருவாக்கப்படும்.

சிறைவாசிகளுக்கு எழுத்தறிவுத் திட்டம்.. பேரவையில் 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்!

14. உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

15. அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையப் பாதுகாப்பு, வெறுப்பை வளர்க்கும் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைக் கண்டறிவது குறித்து விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும்.

16. 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் ரூ.50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

17. 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மின்னுருப் புத்தகங்கள் உருவாக்கப்படும்.

18. சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் ரூ.25 லட்சம் செலவில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

19. புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

20. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மற்றும் அரிய நூல்கள் அறிஞர் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும்.

21. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பதிப்பகங்களோடு ஒப்பந்தம் மேற்கொண்டு உலகப் புகழ் பெற்ற இலக்கியங்கள் மற்றும் உலக இலக்கியங்களின் எளிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்காக நூல் வரிசைகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

22. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு மறுசீரமைக்கப்படும்.

23. இளைஞர் இலக்கியத் திருவிழா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடத்தப்படும்.

24. கன்னிமாரா பொது நூலகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சிறப்புப் பிரிவுகள் ரூ.5 கோடி செலவில் தொடங்கப்படும்.

25. ஆண்டு தோறும் நூலகர்களுக்கு தொடர் பயிற்சிகள் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

26. அனைத்து மாவட்ட மைய, முழுநேரக் கிளை நூலகங்கள் ரூ.15 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். முதற்கட்டமாக 20 மாவட்ட மைய மற்றும் 30 முழுநேரக் கிளை நூலகங்கள் மறுசீரமைக்கப்படும்.

banner

Related Stories

Related Stories