தமிழ்நாடு

“கடவுளே கைவிட்ட போதும் என் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த தெய்வம் முதல்வர்தான்” : டானியாவின் தாய் நெழ்ச்சி!

“தன்னுடைய குழந்தையை கடவுளே கைவிட்ட போதும் என் குழந்தைக்கு இன்று மறுவாழ்வு அளித்த தெய்வம் தமிழக முதல்வர்” என டான்யாவின் டானியாவின் தாய் சௌபாக்கியம் தெரிவித்துள்ளார்.

“கடவுளே கைவிட்ட போதும் என் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த தெய்வம் முதல்வர்தான்” : டானியாவின் தாய் நெழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on


திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள்  டானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது. 

தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோர்களிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். 

“கடவுளே கைவிட்ட போதும் என் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த தெய்வம் முதல்வர்தான்” : டானியாவின் தாய் நெழ்ச்சி!

இதுகுறித்து முதலமைச்சர் அறிந்தவுடன், சிறுமி டேனியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் 29.8.2022 அன்று சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார். 

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (8.2.2023) இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர், எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி, தொடர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

“கடவுளே கைவிட்ட போதும் என் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த தெய்வம் முதல்வர்தான்” : டானியாவின் தாய் நெழ்ச்சி!

சிறுமி டானியாவின் தாய் சௌபாக்கியம், தனது இல்லத்திற்கு நேரில் வந்து மகளை நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டானியாவின் தாயார், “தன்னுடைய குழந்தையை கடவுளே கைவிட்ட போதும் என் குழந்தைக்கு இன்று மறுவாழ்வு அளித்த தெய்வம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். தன்னுடைய குழந்தை சிகிச்சைக்கு உதவ உறவினர்களோ யாருமே வர வில்லை.

தெய்வமும் என் குடும்பத்தை கைவிட்டது ஆனால் இன்று என் குழந்தை மற்ற குழந்தை போல் இன்று சிரிப்பு விளையாட்டுகிறது என்றால் அது தமிழக முதல்வருடைய கருணையால் தான். என் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்தவர் தமிழக முதல்வர். எங்களுடைய தெய்வம்தான்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories