தமிழ்நாடு

“எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் கிடைத்துள்ளது” : முதல்வர் பெருமிதம்!

தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில்களுக்கான முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடந்த ஆண்டு கிடைத்துள்ளன

“எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் கிடைத்துள்ளது” : முதல்வர் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (9.1.2023) சென்னையில், வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து நடத்திய உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகத் தமிழ் முதலீட்டாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள Global Tamil Angels (www.tamilangels.fund) இணையதளத்தை  தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.1.2023) சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகத் தமிழ் முதலீட்டாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள “Global Tamil Angels” இணையதளத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரை, “தாய்த் தமிழ்நாட்டின் மீது பற்றும், திராவிட முன்னேற்றக் கழக அரசின் நல்லாட்சியின்மீது நம்பிக்கையும் கொண்டு இந்த "உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள்" மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைவரையும் நான் அன்போடு, இன்முகத்தோடு, மகிழ்ச்சியோடு, பூரிப்பொடு, புளங்காகித உணர்வோடு உங்கள் அத்தனை பேரையும் வருக! வருக! வருக! என வரவேற்கிறேன்.

“எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் கிடைத்துள்ளது” : முதல்வர் பெருமிதம்!

வடஅமெரிக்க தமிழ் சங்கங்களின் பேரவைத் (FeTNA) தலைவர் முனைவர் பாலா சுவாமிநாதன் அவர்கள், செயலர் கிங்ஸ்லி சாமுவேல் அவர்கள், முன்னாள் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜான் பிரிட்டோ, கணபதி முருகேசு , ஜானகி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கலந்த வணக்கத்தை நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருக்கும் புத்தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு கலந்த வணக்கத்தை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த நல்ல நிகழ்ச்சியை ஃபெட்னா அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின்கீழ் இயங்கக்கூடிய டான்சிம் நிறுவனம் நடத்துவது என்பது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது!

“எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் கிடைத்துள்ளது” : முதல்வர் பெருமிதம்!

நம் மாநிலத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்கான நல்லதொரு சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் பல்வேறு ஆக்கப்பூர்வமான புதிய செயல்திட்டங்களை நமது அரசு பொறுப்பேற்றதிலிருந்து செயல்படுத்தி வருகிறது. புத்தொழில் சார்ந்த செயல்பாட்டுக்கான "லீடர்" (leader) அங்கீகாரத்தினை ஒன்றிய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா (Startup India) அமைப்பு நமது தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில்களுக்கான முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடந்த ஆண்டு கிடைத்துள்ளன. இது 2021-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 70 விழுக்காடு அதிகமாகும். இந்தியாவில் புத்தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்த விழுக்காடு கடந்த ஆண்டு எதிர்மறையாக இருந்தது. அத்தகைய மந்தமான பொருளாதாரச் சூழலிலும் தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது.

“எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் கிடைத்துள்ளது” : முதல்வர் பெருமிதம்!

புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருப்பதை, அண்மையில் 'இந்தியா டுடே' என்ற ஏட்டின் ஆய்வறிக்கை கூறியதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள். தொழில்கள் தொடங்கி நடத்துவதற்கான இலகுவான சூழலை அமைத்து இருப்பதிலும் (ease of doing business) பதிமூன்றாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு தமிழ்நாட்டை நாம் மேம்படுத்தி இருக்கிறோம்.

புதுயுகத் தொழில்களை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும் பல்வேறு முன்னோடி செயல் திட்டங்களை நமது அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

* ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கொள்கை

* வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழிற்கொள்கை ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது.

* பசுமை தொழில்நுட்பம்.

*ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைத் தொகுப்புக்கான அரசாணை ஒன்றும் அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

“எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் கிடைத்துள்ளது” : முதல்வர் பெருமிதம்!

அனைத்துத் துறை வளர்ச்சியை இலக்காகக் கொண்டது நமது அரசு. அதில் தொழில்துறை மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. அனைத்து விதமான தொழில்களும் வளர வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும் அது பரவ வேண்டும். புத்தாக்கத் தொழில்கள் அனைத்தும் சிறக்க வேண்டும். இதற்காக, புத்தொழில் மற்றும் புத்தாக்கத் துறையிலும் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி ஏற்பட ஏதுவாக வட்டாரப் புத்தொழில் மையங்கள் மதுரை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

பட்டியலினத்தவர், பழங்குடியினர் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் நடத்தும் புத்தொழில் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்யும் பொருட்டு 30 கோடி ரூபாய் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்கநிலை புத்தொழில் நிறுவனங்களுக்காக வழங்கப்படும் மானியங்களில் பெண்களுக்கும், இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து செயல்படும் நிறுவனங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது. வளர்ந்துவரும் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் நோக்கத்துடன் 100 கோடி ருபாய் நிதி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

“எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் கிடைத்துள்ளது” : முதல்வர் பெருமிதம்!

நாட்டிலேயே முதல் முறையாக காலநிலை மாற்றம் காரணமாக உருவாகியுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தரும் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் பொருட்டு, ஆயிரம் கோடி ரூபாய் பசுமை நிதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலகளாவிய தமிழ் முதலீட்டாளர்களும் பெருமளவில் பங்கு பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, குறிப்பாக எல்லா தலைமுறையினரின் புத்தொழில் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளில் உங்கள் அனைவரையும் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் இன்று நம் அரசின் நிறுவனமான டான்சிம் மூலமாக குளோபல் தமிழ் ஏஞ்செல்ஸ் (Global Tamil Angels) தளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

“எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் கிடைத்துள்ளது” : முதல்வர் பெருமிதம்!

இது உள்ளபடியே எனக்குப் பெருமையாக இருக்கிறது. இதன் மூலம் உலகெங்கும் வாழும் முதலீடு செய்யும் சக்தி படைத்த தமிழர்கள் நம் மாநிலத்தில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு மட்டுமல்லாது அவர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட முடியும். இதற்கான ஒருங்கிணைப்பு சேவைகள் அனைத்தும் டான்சிம் நிறுவனத்தால் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

இன்று தொடங்கப்படும் இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக “அமெரிக்கத் தமிழ் நிதியம்” என்ற அமெரிக்க வாழ் தமிழர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு மூலமாக 16 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டின் தொடக்கநிலை புத்தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி பெரும் மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த முன்னெடுப்பில் ஈடுபட்டிருக்கக்கூடிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

“எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் கிடைத்துள்ளது” : முதல்வர் பெருமிதம்!

வட அமெரிக்க வாழ் தமிழர்கள் பெருமளவில், இந்த நல்ல நோக்கத்துக்காக இங்கே நேரில் வந்து இந்த நல்ல முயற்சியை தொடங்கி வைத்திருப்பது நாட்டிலேயே ஒரு முன்மாதிரித் திட்டம் என்று நான் நினைக்கிறேன். இந்த நிகழ்வு பற்றிய செய்தி பல்வேறு நாடுகளில் வாழும் சக்தி வாய்ந்த தமிழர்களிடத்திலும் பரவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் புதுயுக தொழில் முனைவுகளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பங்குபெற வேண்டுமாய் இன்று நல்லதொரு விதை விதைக்கப்பட்டு உள்ளது. அது இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவில் தமிழ்நாடு முன்னணி இடத்தைப் பெற உதவும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் உங்கள் அனைவரையும் நான் வாழ்த்தி, அதே நேரத்தில் புத்தாண்டு வாழ்த்துகளையும், வரும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகளையும் உங்களுக்கு தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories