தமிழ்நாடு

மாட்டுக்கறி TO நுங்கு வரை.. “அவர் டாக்டரா இல்ல சாமியாரா?”-ஷர்மிகாவுக்கு எதிராக கொதித்தெழும் மருத்துவர்கள்

மாட்டுக்கறி TO நுங்கு வரை.. “அவர் டாக்டரா இல்ல சாமியாரா?”-ஷர்மிகாவுக்கு எதிராக கொதித்தெழும் மருத்துவர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் வந்ததில் இருந்தே, இந்துத்துவ சிந்தனைகளை மக்கள் மீது திணிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதில் முதற்படியாக 'மாடு'. மாட்டை வைத்து அரசியல் செய்வது என்றால் அது பா.ஜ.க. மட்டும்தான். மாட்டை கடவுளாக பாவிக்க வேண்டும், மாட்டு சாணி மருத்துவ குணம் நிறைந்தது, கோமியத்தை குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும் என பல மூட நம்பிக்கைகளை மக்கள் மனதில் விதைக்க முயன்று வருகிறது.

இப்படி இருக்கையில், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவ கும்பல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அது மட்டுமின்றி, மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் தேச விரோதியாக கருதி வெறுப்பு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

மாட்டுக்கறி TO நுங்கு வரை.. “அவர் டாக்டரா இல்ல சாமியாரா?”-ஷர்மிகாவுக்கு எதிராக கொதித்தெழும் மருத்துவர்கள்

இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அந்த கும்பலை, பலரும் மதிப்பதே இல்லை. இதனால் மருத்துவ ஆலோசனை என்ற பெயரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட தொடங்கியுள்ளது பா.ஜ.க.வினர். அதில் தற்போது சிக்கியுள்ளது பா.ஜ.க மாநில நிர்வாகி டெய்சியின் மகள் ஷர்மிகா.

அதவாது பா.ஜ.கவின் மாநில நிர்வாகியாக இருப்பவர் டெய்சி. இவர் அண்மையில் திருச்சி சூர்யாவின் ஆடியோ சர்ச்சையில் சிக்கினார். அவ்வளவு கேவலமாக சூர்யா பேசியும் கூட "நாங்கள் அக்கா - தம்பி போன்றவர்கள்" என்று பேட்டியளித்தார். இதற்காகவே நெட்டிசன்கள் இவரை கிண்டலடித்து வந்தனர்.

மாட்டுக்கறி TO நுங்கு வரை.. “அவர் டாக்டரா இல்ல சாமியாரா?”-ஷர்மிகாவுக்கு எதிராக கொதித்தெழும் மருத்துவர்கள்

இந்த நிலையில், இவருக்கு ஷர்மிகா என்ற மகள் உள்ளார். சித்த மருத்துவம் படித்த இவர், பிரபல யூடியூப் சேனலுக்கு மருத்துவ குறிப்புகள் வழங்கி வருவார். உடல் உபாதைகள், இதை சாப்பிடலாம் - இதை சாப்பிடக்கூடாது என்று டிப்ஸ் வழங்கி வருவார்.

இப்படி மருத்துவர் என்ற போர்வைக்குள் இருந்து யூடியூப் சேனல் மூலம் மறைமுக மத பிரச்சாரத்தை செய்வதாக ஷர்மிகாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஏனெனில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் மாட்டுக்கறி, கோழிக்கறி உட்பட அனைத்தையும் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

மாட்டுக்கறி TO நுங்கு வரை.. “அவர் டாக்டரா இல்ல சாமியாரா?”-ஷர்மிகாவுக்கு எதிராக கொதித்தெழும் மருத்துவர்கள்

அதாவது அவர் அளித்த பேட்டி ஒன்றில், "மாட்டுக்கறி என்பது நாம் கடவுளாக பார்க்கும் ஒரு அழகான விஷயம். அதையும் மீறி சொல்ல வேண்டுமானால், இந்திய மக்கள் DNA-விலே தங்களை விட பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் ஆகக்கூடிய சக்தி இல்லை. ஆடு, கோழி, கெளதாரி என நம்மை விட சிறிய மிருகங்களை சாப்பிட்டால் நமக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் பெரிய மிருகங்களை சாப்பிட்டால் செரிமானம் பிரச்னை ஏற்படும்" என்றார்.

தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "எடை குறைக்க 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்துவிட்டு, 3 கிலோ எடை குறைந்தால் கூட, பின்னர் ஒரே ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் அதே 3 கிலோ எடை ஒரே நாளில் ஏறும்" என்றார். இதனைத் தொடர்ந்து மற்றொரு பேட்டியில், "பெண்கள் அயோடின் உப்பை பயன்படுத்த கூடாது; பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி சிறந்தது. எனவே அதனை சாப்பிடுவதில் கவனம் வேண்டும்" என்றார்.

மாட்டுக்கறி TO நுங்கு வரை.. “அவர் டாக்டரா இல்ல சாமியாரா?”-ஷர்மிகாவுக்கு எதிராக கொதித்தெழும் மருத்துவர்கள்

மேலும் "குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக மாறும், தினசரி 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் அழகாகும், ஷாம்பூ தான் முடிக்கு விஷம்.." என்று பல விதமான கருத்துக்களையும் வாரி வழங்கி வருகிறார் ஷர்மிகா.

தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் கன்டென்டாக இருக்கும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஒரு டாக்டரை ட்ரோல் செய்வதற்கு முன் யோசிங்கப்பா கொஞ்சம். யாரை பேசுகிறீர்கள்? ஒரு ராணுவ வீரரை போன்றுதான் மருத்துவரும். நாட்டுக்கு சேவை செய்பவர்கள். நான் ஒரு சித்த மருத்துவர். நீங்கள் டாக்டரையே இல்லை என்கிறார்கள். நான் படித்து வந்துள்ளேன் என்ன பேச வேண்டும் என்று தெரியும். மருத்துவர்களை விமர்சிப்பதால், அவர்களை தொந்தரவு செய்தால் தண்டிப்பதற்கான சட்டங்களும் உள்ளன. எங்கள் சித்த மருத்துவர்கள் சேர்ந்ததால் என்ன ஆகும் தெரியுமா?" என்று பேசியுள்ளார்.

மாட்டுக்கறி TO நுங்கு வரை.. “அவர் டாக்டரா இல்ல சாமியாரா?”-ஷர்மிகாவுக்கு எதிராக கொதித்தெழும் மருத்துவர்கள்

முன்னதாக இவர் அள்ளிவிட்ட பொய்கள் குறித்து தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் கூறுகையில், "ஷர்மிகா ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவராக, சமூக ஊடகங்களில் கருத்துகள் சொல்ல எந்த தடையும் இல்லை. ஆனால் மருத்துவ விதிகளின் படி தவறான கருத்தை பரப்பக் கூடாது.

அதுவும் சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி இல்லை எனவும் எந்த இறைச்சியும் சாப்பிக் கூடாது என்று குறிப்பிடவில்லை. யாருக்கு சத்தான உணவு தேவைபடுகிறதோ அது சைவம் ஆனாலும் சரி, அசைவம் ஆனாலும் சரி அவர்கள் விருப்பம் படி சாப்பிடலாம். மேலும் ஷர்மிகா சொல்வது போன்ற எந்த ஆதாரமும் இல்லை. தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இதுபோல பேசுகிறார்.

மாட்டுக்கறி TO நுங்கு வரை.. “அவர் டாக்டரா இல்ல சாமியாரா?”-ஷர்மிகாவுக்கு எதிராக கொதித்தெழும் மருத்துவர்கள்

ஒரு மருத்துவர் மருத்துவரீதியான கருத்துகளை மட்டுமே மக்களிடையே சொல்லவேண்டும். மருத்துவத்திற்கு அப்பாற்றப்பட்டு சொல்லக்கூடாது, மேலும் மருத்துவ ரீதியாக எழுந்த ஹர்மிகா கருத்தில் மீது யாரேனும் புகார் அளித்தார் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர் பேசுவதைக் கேட்டு சுயமாக மருத்துவத்தை மேற்கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் 1541 மருத்துவ மையங்கள் உள்ளன. அங்குச் சென்று இலவசமான ஆலோசனைகளையும் முறையான சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

மாட்டுக்கறி TO நுங்கு வரை.. “அவர் டாக்டரா இல்ல சாமியாரா?”-ஷர்மிகாவுக்கு எதிராக கொதித்தெழும் மருத்துவர்கள்

இந்த நிலையில் இவர் அள்ளிவிட்ட கதைகளை சித்த மருத்துவர் ஒருவர் சரமாரியாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "அனைத்து பேட்டியிலும் “நம்மள கடவுள் எப்டி படைச்சிருக்காருனா.., குழந்தை பாக்கியம் நமக்கு கடவுளா குடுக்கறது.., கடவுளா நினைக்கற மாட்ட சாப்பிட கூடாது..," என்று பலவற்றையும் கடவுளுடன் முடிச்சு போடுகிறார் ஷர்மிகா. யோசித்து பார்த்தல் அவர் ஒரு மருத்துவரா அல்லது மரத்தடில அருள் வாக்கு சொல்லும் சாமியாரா? என்கிற சந்தேகம் எழுகிறது.

முதலில் ஷர்மிகா எதில் specialist ? தலை முதல் கால் வரை அனைத்து நோய்க்கும் கருத்து சொல்லி வருகிறார். குறிப்பாக dentist , pediatrician, dermatologist, cardiologist, gynecologist, endocrinologist, ophthalmologist, urologist, psychiatrist, sexologist என்று பல மருந்து குறிப்புகளை கூறிக்கொண்டே போகிறார்.

மாட்டுக்கறி TO நுங்கு வரை.. “அவர் டாக்டரா இல்ல சாமியாரா?”-ஷர்மிகாவுக்கு எதிராக கொதித்தெழும் மருத்துவர்கள்

அவர் ஒரு மருத்துவ குறிப்பு கூறுகிறார்.. பின்னர் அவரே அதில் பின் விளைவுகள் எதுவும் ஏற்படாது என்றும் கூறுகிறார். இவர் எதுவும் மருத்துவ ரீதியான journal எழுதியிருக்கிறாரா என்ன? அவர் பேட்டியில் என்ன வேண்டுமானாலும் கூற முடியாது. மருத்துவத்திற்கு என்று ஒரு சில விதிமுறைகள் உள்ளது. ஆனால் இவரோ அதையும் மீறி தற்போது செயல்பட்டு வருகிறார்.

இதனை நம்பி சில மக்களும் இதனை பின் தொடர்ந்து வருகின்றனர். மக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். எந்த சித்த மருத்துவத்திலும் மாடு சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை. அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் உணவு உட்கொள்வது அவசியம்" என்று கூறினார்.

தொடர்ந்து ஷர்மிகாவை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். அவர் கூறிய அடுக்கடுக்கான பொய்களுக்கு மருத்துவ ரீதியாக விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படி இருக்கையில் பொதுமக்கள் இதுபோன்று பொய்களால் ஏமாந்துவிட கூடாது என்பதால் தமிழ்நாடு மருத்துவத்துறை சார்பில் 'நலம் 365' என்ற யூடியூப் சேனல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Related Stories