தமிழ்நாடு

திருமணமான 2 மாதத்திலேயே நடந்த கொடூரம்.. கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம்!

தாம்பரம் அருகே சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருமணமான 2 மாதத்திலேயே நடந்த கொடூரம்.. கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜகன்னாதன். இவரது மனைவி பரோலினா. இந்த தம்பதிக்குக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தம்பதிகள் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை ஜகன்னாதன் ஓட்டியுள்ளார். அப்போது இவர்களுக்குப் பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

திருமணமான 2 மாதத்திலேயே நடந்த கொடூரம்.. கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம்!

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரோலினா உயிரிழந்துள்ளார். மேலும் ஜகன்னாதனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந்த பரோலினா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

திருமணமான 2 மாதத்திலேயே நடந்த கொடூரம்.. கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம்!

மேலும் படுகாயம் அடைந்த ஜகன்னாதனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். திருமணமான இரண்டு மாதத்திலேயே கணவன் கண் முன்னே மனைவி விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories