தமிழ்நாடு

ரூ.350 மெஷினுக்கு 10,000 பில் எழுதிய அண்ணாமலை: சொந்தக் கட்சியில் கைவரிசை? அப்போ ரபேல் விமானமே வாங்கலாமே?

ரூ.345 மதிப்புக்கொண்ட காது கேளாதோருக்கான கருவியை ரூ.10000 என்று புருடா விட்ட பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.350 மெஷினுக்கு 10,000 பில் எழுதிய அண்ணாமலை: சொந்தக் கட்சியில் கைவரிசை? அப்போ ரபேல் விமானமே வாங்கலாமே?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"முன்னாள் காக்கியும் இந்நாள் சங்கியும்"" - (இப்படி நாம் கூறவில்லை; திருப்பூரில் அவரது கட்சிக்காரர்களே சூட்டியபட்டமிது!) புதிதாக தலைமைப் பொறுப்பை ஏற்று தமிழக பா.ஜ.க.வுக்கு வந்ததிலிருந்து, அண்ணாமலை நடத்தி வரும் அரைவேக்காட்டுதன அரசியலைக் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, தமிழக அரசையும், கழகத்தையும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவரின் அரசியல் அரை வேக்காட்டுத் தனத்தால், பா.ஜ.கவினரை வெளியே தலைகாட்ட முடியாது நிலைக்கு தள்ளியிருக்கிறது.

ரூ.350 மெஷினுக்கு 10,000 பில் எழுதிய அண்ணாமலை: சொந்தக் கட்சியில் கைவரிசை? அப்போ ரபேல் விமானமே வாங்கலாமே?

இந்நிலையில் தற்போது தன்னை ஒரு விவசாயி, எளிய வீட்டுப்பிள்ளை என்றால்லாம் கதை விட்டு வந்த அண்ணாமலை கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை 5 லட்சம் ரூபாய் என தெரியவந்ததையடுத்து பலரும் அண்ணாமலைக்கு இவ்வளவு மதிப்புள்ள வாட்ச் வாங்க பணம் எங்கிருந்து வந்தது, பில் எங்கே என பல்வேறு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார் , 20000 புத்தகம் படித்துள்ளேன். 9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ், 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச் என கதையளந்த அண்ணாமலை தற்போது ரூ.345/- மெஷினை 10,000 ரூபாய் என பொய் சொல்லி அம்பலப்பட்டுள்ளார்.

ரூ.350 மெஷினுக்கு 10,000 பில் எழுதிய அண்ணாமலை: சொந்தக் கட்சியில் கைவரிசை? அப்போ ரபேல் விமானமே வாங்கலாமே?

குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் முக்கிய காரணமாக இருந்தது சமூகவலைத்தளங்கள்தான். அப்போது பாஜக பரப்பிய பொய்ச்செய்திகள் உண்மை என்றே மக்களால் நம்பப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக சொன்னது அனைத்தும் பொய் என்பது தற்போது அனைத்து தரப்பினரையும் எட்டியுள்ளது.

அதிலும் தமிழ்நாட்டில் பாஜக சொல்லும் பொய்களை எப்போதுமே மக்கள் நம்பியது இல்லை. ஆனாலும், பாஜக தலைவர்கள் பொய் சொல்வதை ஒருபோதும் நிறுத்தியதில்லை. அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது.

ரூ.350 மெஷினுக்கு 10,000 பில் எழுதிய அண்ணாமலை: சொந்தக் கட்சியில் கைவரிசை? அப்போ ரபேல் விமானமே வாங்கலாமே?

தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஓர் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அண்ணாமலை "காது கேளாதோருக்கு வழங்கப்படும் Cyber Sonic என்ற நிறுவனத்தின் கருவு ஒவ்வொன்றும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும், அதை பாஜக சார்பில் உங்களுக்கு வழங்குகிறோம்" என்று கூறினார். ஆனால் கொடுக்கப்பட்ட அந்த கருவியில் விலை வெறும் ரூ.345 எனவும் அது சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

ரூ.1,999 மதிப்பு கொண்ட அந்தக் கருவியை அமேசான் 83% தள்ளுபடி போக ரூ.345க்கு தற்போது விற்பனை செய்வதாக தன் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. இதன்மூலம் பொய் சொல்வதையே மூலதனமாக கொண்ட பாஜக மீண்டும் ஒரு பொய்யை கூறிவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

ரூ.350 மெஷினுக்கு 10,000 பில் எழுதிய அண்ணாமலை: சொந்தக் கட்சியில் கைவரிசை? அப்போ ரபேல் விமானமே வாங்கலாமே?

இதன்மூலம், மற்றொரு உண்மை வெளிவந்துள்ளது. அதாவது காது கேளாதோருக்கு பொறுத்தும் கருவி ரூ.345. ஆனால் அண்ணாமலை சொல்வது ரூ.10,000. அப்படியானல் அண்ணாமலை 95 பேருக்கு வழங்கியதாக தெரிகிறது. ஒரு கருவின் உண்மை விலை ரூ.345 என்றால் 95 பேருக்கு கருவி வாங்கிய செலவு ரூ.32,775 மட்டுமே ஆகிருக்கும். ஆனால் அண்ணாமலை 10000 என்று சொல்லியிருக்கிறார்.

அதனால் 95 பேருக்கு தலா 10000 என்றால் ரூ.9,17,225. இதன்மூலம் சொந்த கட்சியில் இருந்தே அண்ணாமலை கை வைத்துள்ளாரா என்றும் இப்படியே போனால் ரபேல் விமானத்தையே வாங்கலாம் போல என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பட்டு வருகிறது. இதற்கு அண்ணாமலை என்ன பொய்யை அவிழ்க்க இருக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories