தமிழ்நாடு

தீப்பிடித்து எரிந்த AC.. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலதிபர் உடல் கருகி பலி: இரவில் நடந்த கொடூரம்!

சென்னையில் ஏ.சி. தீப்பிடித்து எரிந்த விபத்தில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீப்பிடித்து எரிந்த AC.. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலதிபர் உடல் கருகி பலி: இரவில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த கட்டுமான நிறுவன தொழில் அதிபர் சுரேஷ்குமார். இவரது மகன் ஸ்டீபன் ராஜ். இவரது மனைவி சுஜிதா பிரசவத்திற்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் இருந்துள்ளனர்.

மேலும் வீட்டில் சுரேஷ் குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து இன்று காலை அவரது வீட்டிலிருந்து புகை வருவதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தீப்பிடித்து எரிந்த AC.. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலதிபர் உடல் கருகி பலி: இரவில் நடந்த கொடூரம்!

பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறை முழுவதும் தீ பிடித்து எரிந்திருந்தது. மேலும், உள்ளே இருந்த சுரேஷ் குமார் உடல் கருகி சடலமாக இருந்ததை போலிஸார் கண்டனர். பிறகு போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

தீப்பிடித்து எரிந்த AC.. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலதிபர் உடல் கருகி பலி: இரவில் நடந்த கொடூரம்!

இது குறித்து விசாரணை செய்தபோது ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றவர்கள் மருத்துவமனையில் இருந்ததால் உயிரி தப்பியுள்ளனர். மின்கசிவால் ஏ.சி தீப்பிடித்து எரிந்த விபத்தில் தொழிலதிபர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories