தமிழ்நாடு

"நரிக்குறவன் என குறிப்பிடாமல் நரிக்குறவர் என அழைக்கவேண்டும்" -விழுப்புரம் MP ரவிக்குமார் வலியுறுத்தல்!

நரிக்குறவன் என இழிவாகக் குறிப்பிடக்கூடாது எனவும் அவர்களை நரிக்குறவர் என அழைக்குமாறும் விழுப்புரம் MP ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

"நரிக்குறவன் என குறிப்பிடாமல் நரிக்குறவர் என அழைக்கவேண்டும்" -விழுப்புரம் MP ரவிக்குமார் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நரிக்குறவன் என இழிவாகக் குறிப்பிடக்கூடாது எனவும் அவர்களை நரிக்குறவர் என அழைக்குமாறு நாடாளுமன்றத்தில் திருத்த நோட்டீஸ் அளித்துள்ளேன் என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் , "நரிக்குறவர் சாதியைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா இன்று (டிசம்பர் 8 ஆம் தேதி ) நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும். நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை கிடைக்க செய்வதற்கு நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது (2006-2011) நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தேன்.

"நரிக்குறவன் என குறிப்பிடாமல் நரிக்குறவர் என அழைக்கவேண்டும்" -விழுப்புரம் MP ரவிக்குமார் வலியுறுத்தல்!

2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசியபோது: " சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கின்ற நரிக்குறவ மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, அந்தக் கோரிக்கை மத்திய அரசாலே 1964 ஆம் ஆண்டிலேயே கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட, இன்னும் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலேதான் வைக்கப்பட்டிருக்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் கிடக்கும் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி, அவர்களைப் பழங்குடியினர் பட்டியலிலே சேர்ப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்னாலே அவர்களுக்கும் ஒரு நல வாரியத்தை உருவாக்கித் தர வேண்டுமென்று உங்கள் வாயிலாக நான் வேண்டிக்கொள்கின்றேன்." என்று தெரிவித்தேன்.

எனது கோரிக்கையை ஏற்று 2008 ஆம் ஆண்டிலேயே அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ‘நரிக்குறவர் நலவாரியம் ‘ அமைத்துத் தந்தார். 2008 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு செய்யப்பட்டது. அதற்காக, நரிக்குறவர் மக்கள் சென்னையில் பேரணி நடத்தி என்னைப் பாராட்டினர். வடலூரில் இருக்கும் நரிக்குறவர் குடியிருப்பில் எனது கோரிக்கையை ஏற்று சிறப்புப் பள்ளி ஒன்றும் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது.

"நரிக்குறவன் என குறிப்பிடாமல் நரிக்குறவர் என அழைக்கவேண்டும்" -விழுப்புரம் MP ரவிக்குமார் வலியுறுத்தல்!

14 ஆண்டுகளுக்கு முன்பு நான் முன்வைத்த கோரிக்கை இன்று நிறைவேறுகிறது. அது நிறைவேறும் நேரத்தில் அந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்கும் வாய்ப்பை நான் பெற்றிருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.

இந்த சட்ட திருத்த மசோதா டிசம்பர் 7 ஆம் தேதி இரவுதான் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. அதன் வாசகங்களை நான் படித்துப் பார்த்து போது சிறு அதிர்ச்சி ஏற்பட்டது. ‘நரிக்குறவன் குருவிக்காரன்’ என்ற பெயர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எவ்வாறு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு இணையதளத்துக்குச் சென்று சோதித்தேன். அதில் நரிக்குறவர் என்றுதான் 'ர்' விகுதியோடு அந்தப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதே சாதியைப் பழகுடியினர் பட்டியலில் சேர்க்கும் போது அதை 'ன்' விகுதி போட்டு ஏன் குறிப்பிட வேண்டும்?

"நரிக்குறவன் என குறிப்பிடாமல் நரிக்குறவர் என அழைக்கவேண்டும்" -விழுப்புரம் MP ரவிக்குமார் வலியுறுத்தல்!

எஸ் சி ; எஸ் டி சாதிகளின் அட்டவணைகளில் இருக்கும் பெயர்கள் மட்டும் 'ன்' விகுதியோடு முடிவது நீண்ட காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் முன்னர் அப்படித்தான் சாதிப்பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் தலைவர் கலைஞர் ஆட்சியின் போது 50 ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பெயர்கள் எல்லாம் 'ர்' என முடியும் விதத்தில் மரியாதையோடு மாற்றியமைக்கப்பட்டன. எஸ்சி, எஸ்டி பட்டியலை மாநில அரசு மாற்றியமைக்க முடியாது என்ற காரணத்தால் அது அப்படியே விடப்பட்டது. அவற்றை மாற்றும்படி அப்போதே ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு தீர்மானம் இயற்றிப் பரிந்துரை செய்திருக்கலாம். இப்போது நரிக்குறவர் சாதியை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சட்ட திருத்தம் செய்வது போல எல்லா சாதிகளின் பெயர்களையும் திருத்தி சட்ட திருத்தத்தை மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் ஏனோ அது செய்யப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக எஸ்.சி பட்டியலில் இருக்கும் சாதிகள் 'ன்' என்ற விகுதியோடு முடிவதை மாற்றி 'ர்' என முடியும் படி திருத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களும் இந்த கோரிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் அளித்து இருக்கின்றார். ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை.

"நரிக்குறவன் என குறிப்பிடாமல் நரிக்குறவர் என அழைக்கவேண்டும்" -விழுப்புரம் MP ரவிக்குமார் வலியுறுத்தல்!

நாடாளுமன்றத்தில் 8 ஆம் தேதி அறிமுகம் படுத்தப்படும் சட்ட மசோதாவில் நரிக்குறவன், குருவிக்காரன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை நரிக்குறவர் குருவிக்காரர் எனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று திருத்த தீர்மானம் நோட்டீஸ் ஒன்றை நான் அளித்திருக்கிறேன். அதை ஏற்று அந்தப் பெயர்கள் திருத்தப்படும் என நம்புகிறேன். அந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் விவாதத்துக்கு நாள் குறிக்கப்படும். அப்போது அதை உறுப்பினர்கள் வலியுறுத்தினால் நிச்சயம் அதை மாற்ற முடியும். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திருத்தத்தை ஆதரித்து வழிமொழியவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்கள் 'ர்' விகுதியோடு மாற்றப்பட்டதைப் போல எஸ்சி, எஸ்டி பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்களும் மாற்றப்பட தமிழ்நாடு அரசு தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்துகிறேன்" என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories