தமிழ்நாடு

’சார் இது உண்ணாவிரதப் போராட்டம்’.. கோவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூத்து!

கோவையில் அ.தி.மு.க நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இடையே தொண்டர்கள் உணவு சாப்பிடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’சார் இது உண்ணாவிரதப் போராட்டம்’.. கோவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று காலையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இதில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதி.மு.க தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

’சார் இது உண்ணாவிரதப் போராட்டம்’.. கோவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூத்து!

அப்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க தொண்டர்கள் அருகே இருந்த உணவகங்களுக்குச் சென்று நன்றாக வயிறு முட்ட பிடி பிடித்துள்ளனர். இது கூட பரவாயில்லை. நடப்பது உண்ணாவிரதப் போராட்டம் என்று கூட தெரியாமல் ஒரு வேனிலிருந்து தொண்டர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டுள்ளது. உணவு வாங்குவதற்காக தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டனர்.

மேலும் சில அ.தி.மு.க தொண்டர்கள் அருகே இருந்த மதுக்கடைக்குச் சென்று மகிழ்ச்சியாகச் சரக்கு வாங்கி குடித்து விட்டு அமைதியாக வந்து நாற்காலியில் அமர்ந்துள்ளனர். இதைஎல்லாம் பார்த்த அப்பகுதி மக்களுக்கு நடப்பது உண்ணாவிரதப் போராட்டம் தானா இல்லது ஏதாவது விருந்து நடக்கிறதா என்ற குழப்பமே ஏற்பட்டு விட்டது.

’சார் இது உண்ணாவிரதப் போராட்டம்’.. கோவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூத்து!

மேலும் 'சார் இது உண்ணாவிரதப் போராட்டம் தானே?', கொஞ்சம் உங்கள் தொண்டர்களுக்கு சொல்லுங்கள் என பொதுமக்கள் முணுமுணுத்தபடியே நடந்து சென்றனர். தற்போது அ.தி.மு.க தொண்டர்கள் உணவு சாப்பிடுவதும், மதுக் கடைக்குச் செல்லும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் அ.தி.மு.கவை கிண்டல் அடித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories