தமிழ்நாடு

மற்றொரு பெண்ணுடன் காதல் திருமணம்- மனைவியை கிணற்றில் வீசி கொலை செய்ய திட்டம்.. போதையால் வெளிவந்த உண்மை!

கணவன் தனது மனைவியின் சித்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு பெண்ணுடன் காதல் திருமணம்- மனைவியை கிணற்றில் வீசி கொலை செய்ய திட்டம்.. போதையால் வெளிவந்த உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கணவன் தனது மனைவியின் சித்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், ஊசூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். டோர் டிசைனராக பணிபுரிந்து வரும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி அனுஷ்யா என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகன், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு ராஜேஷ் குமாருக்கும், அவரது மனைவியின் சித்தி மேரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாற, இவரது மனைவிக்கு அது தெரியாமலே இருந்துள்ளது. மேலும் மனைவிக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

இந்த நிலையில் ஒரு நாள், ராஜேஷ் குமார் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது செல்போன் கீழே விழ, மனைவி அதை எடுத்து பார்த்துள்ளார். அதில் இவரும், மனைவியின் சித்தியும் பேசிக்கொள்வது போன்ற ஆடியோக்கள் இருந்துள்ளது. எதேர்ச்சியாக அதனை கேட்ட மனைவிக்கு அதன்பிறகு தான் தனது சித்திக்கும், கணவருக்கும் இரகசிய காதல் இருந்துள்ளது தெரியவந்தது.

மேலும் அந்த வாய்ஸ் ரெக்கார்டை கேட்ட மனைவி அனுஷ்யா பெரும் அதிர்ச்சிக்குள்ளானர். அதில், அவரது சித்தியும், கணவரும் - அனுஷ்யாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது பதிவாகியிருந்தது. மேலும் அவரது கை, கால்களை கட்டி அருகிலிருக்கும் கிணற்றில் தூக்கி வீசிவிடலாம் என்று இருவரும் பேசியிருந்தது பதிவாகியிருந்தது.

அனுஷ்யா சித்தி மேரி
அனுஷ்யா சித்தி மேரி

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து போதை தெளிந்தவுடன் கணவரிடம் கேட்டு சண்டையிட்டுள்ளார். மேலும் இந்த ரெக்கார்டை குடும்பத்தார் அனைவரது முன்பு போட்டு காட்டியுள்ளார். அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் தங்கள் உறவை அவர்கள் கைவிடவில்லை. ஒருமுறை அனுஷ்யாவின் சித்தியுடன் வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்ட கணவனை பிடித்து, வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

பின்னர் அவர்களும் கண்டித்த பிறகும் அவர்களது உறவை கைவிடவில்லை. இதனால் ஒரு நாள், மேரிக்கு தாலிகட்டி வீட்டிற்கு கூட்டி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அனுஷ்யா தனது பிள்ளைகளை கூட்டிக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் கணவர் மற்றும் அனுஷ்யாவின் சித்தி மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அனுஷ்யா
அனுஷ்யா

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இருவருக்கும் தற்போது விவாகரத்து ஆகிவிட்டதாகவும், இது தெரியாமல் தனது மனைவி தன் மீது புகார் தெரிவித்து வருவதாகவும் கணவர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

கணவனே, தன்னை விட வயது மூத்த மனைவியின் சித்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories