தமிழ்நாடு

மழைநீர் தேங்காத சென்னை.. தமிழக அரசின் நடவடிக்கைக்கு TIMES OF INDIA, THE HINDU நாளேடுகள் பாராட்டு !

மழைநீர் வடிகால்களை தமிழ்நாடு அரசு அரசு சிறப்பாக செய்திருப்பதாக TIMES OF INDIA, THE HINDU நாளேடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

மழைநீர் தேங்காத சென்னை.. தமிழக அரசின் நடவடிக்கைக்கு TIMES OF INDIA, THE HINDU நாளேடுகள் பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னையில் புதியதாகக் கட்டப் பட்டு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்கள், எதிர்பார்த்தபடி பெய்த வடகிழக்கு பருவமழையைச் சமாளிக்கும் வகையில் இருந்து வருவதைக் குறிப்பிட்டு "தி டைம்ஸ் ஆப் இந்தியா'வில் (கோவை பதிப்பு) மற்றும் ' தி இந்து' நாளிதழ் ஆகியவற்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

"TIMES OF INDIA" இதழில் கட்டுரை :

சென்னையில் இந்த ஆண்டு பருவ மழையின் முதல் நாள் முதல் காட்சி எதிர்பார்த்தது போலவே தீவிரமாக இருந்தது. ஆனால் நகரில் புதிதாக கட் டப்பட்ட மழைநீர் வடிகால் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் கிட்டத்தட்ட 24 மணி நேர இடைவிடாத மழைக்கும் சமாளிக்கும் வகையில் நிற்கின்றன.செவ்வாய்க்கிழமைக்குள், நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 10 முதல் 13 செ.மீ மழை பெய்தது. குறைந்தது 50 இடங்களை தண்ணீரின் கீழ் கொண்டு வந்து, இரண்டு சுரங்கப் பாதைகளை மூழ்கடித்து, 35 இடங்களில் மரங்கள் விழுந்தன.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு , 187 இடங்கள் முதல் நாள் முடிவில் தண்ணீரில் மூழ்கியதால், பெருநகர சென்னை மாநகராட்சி சுமார் 1.2cc மோட்டார் பம்புகளை பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் சென்னையில் செவ்வாய் அன்று அதிகார அமைப்பு 158 பம்புகளை மட்டுமே சேவைக்கு கொண்டு வர வேண்டியிருந்தது.

மழைநீர் தேங்காத சென்னை.. தமிழக அரசின் நடவடிக்கைக்கு TIMES OF INDIA, THE HINDU நாளேடுகள் பாராட்டு !

மேயர் ஆர்.பிரியா, கமிஷனர் ககன் தீப் உட்பட 19,ccc க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல மணிநேரம் தன்ணீர் தேங்கிய இடங்களுக்குச் சென்று, இன்னும் முழுமையாகச் செயல்படாத மழைநீர் வடிகால் வடிவமைப்பின் செயல்திறனை ஆய்வு செய்தனர். இந்த நாளிதழின் அறிக்கை ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்களுக்கு மேல் தண்ணீர் தேங்கவில்லை என் பதை வெளிப்படுத்தியது. இது 157 கி.மீ நீள புதிய மழைநீர் வடிகால் நன்றாக வேலை செய்தது என்பதைக் குறிக்கிறது. கடந்த சில மாதங்களாக நீர் கால்வாய்கள் மற்றும் பெரிய கால்வாய்கள் தூர்வாரப்பட்டதும் இதற்கு வெகுவாக உதவியது. 135 இடங்களில் இருந்து வெள்ளம் தொடர்பாக புகார்கள் வந்தன. அதில் 12 இடங்களில் மட்டுமே செவ்வாய் மாலை வரை 3.4 அடி தண்ணீர் இருந்தது. அரை டஜன் சாலைகள் பள்ளமாக இருந்தன.

"குறைந்தபட்சம் 163 தங்குமிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ன, மேலும் உணவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தேவைப்படும் இடங்களில், புதிய வடிகால் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வடிகால் வேலை செய்யாத இடங்களில், தீர்வுகள் உருவாக்கப்படும்," என்று மழைநீர் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட பின் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

மேயர் பிரியா ராஜன், போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை முடிக்கி விட்டதாகவும், இது தொடர் பான முயற்சிகள் தொடரும் என்றும் கூறினார்.

மழைநீர் தேங்காத சென்னை.. தமிழக அரசின் நடவடிக்கைக்கு TIMES OF INDIA, THE HINDU நாளேடுகள் பாராட்டு !

கண்ணம்மாப்பேட்டையைச் சேர்ந்த தேவி கூறுகையில், தனது பகுதி ஒவ்வொரு பருவமழையின்போதும் இடுப்பளவு நீரில் மூழ்குவதற்குப் பெயர் பெற்றது. 'இந்த ஆண்டு, அரசாங்கம் என்ன செய்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, தண்ணீர் குறைவாக உள்ளது.' என்று கூறினார். இது குறித்து வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் சீதாராம் கூறியதாவது:"பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக எனது கடைக்குள் தண்ணீர் வரவில்லை . காலை முதல், தேங்கும் நீரை அகற்றும் பணியில் பம்புகள் ஈடு படுத்தப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.

ஆர்வலர்கள் மற்றும் குடியிருப் பாளர்களும் பாராட்டினர். வேளச்சேரியில் உள்ள ஏ.ஜி.எஸ். காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளர் கீதா கணேஷ், கூறுகையில், தங்களின் காலனியில் 2.3 சென்டி மீட்டர் மழைக்கு கூட வெள்ளம் பெருகும் என்றும், தண்ணீ ர் வடிய குறைந்தபட்சம் ஒரு நாள் ஆகும். "கடந்த ஆண்டு நாங்கள் 3 முதல் 4 அடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோம். அப்போது தண்ணீர் வெளியேற 6 மணி நேரம் ஆனது. இன்று எங்கள் காலனியில் அங்கும் இங்கும் சில இடங்களில் நீர் தேங்கி இருப்பதை காண முடிகிறது. அதுவும் கூட சாலை மட்டம் காரணமாக," என்று கூறினார்.இவ்வாறு 'தி டைம்ஸ் ஆப் இந்தி யாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழைநீர் தேங்காத சென்னை.. தமிழக அரசின் நடவடிக்கைக்கு TIMES OF INDIA, THE HINDU நாளேடுகள் பாராட்டு !

"THE HINDU” பாராட்டு :

இதேபோல், சென்னை மாநகராட்சி மேற்கொண்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைளை "தி இந்து" நாளிதழும் பாராட்டி உள்ளது. பருவமழையின் போது வழக்கமாக தண்ணீர் தேங்கும் சாலைகள் இம்முறை பாதிக்கப்படவில்லை என்றும் "தி இந்து" தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர், மேற்கு மாம்பலம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டுள்ள "தி இந்து". நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடு கையில் இது மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளது.பருவமழையின்போது வழக்கமாக தண்ணீர் தேங்கும் சாலைகள் இம் முறை பாதிக்கப்படவில்லை. கடந்த திங்கட் கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர் மேற்கு மாம்பலம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படவில்லை. நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. கடந்த ஆண்டு டன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு.

இவ்வாறு 'திடைம்ஸ் ஆப் இந்தியா' மற்றும் 'தி இந்து நாளிதழ்கள் தமிழக அரசின் சீரிய நடவடிக்கையினை பாராட்டியுள்ளன.

banner

Related Stories

Related Stories