தமிழ்நாடு

“இந்தியக் கடற்படையினர் நிதானத்துடனும் கையாள அறிவுரை வழங்குங்கள்” : பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச் சூடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

“இந்தியக் கடற்படையினர் நிதானத்துடனும் கையாள அறிவுரை வழங்குங்கள்” : பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (21-10-2022) கடிதம் எழுதியுள்ளார்.

   அக்கடிதத்தில், 10 மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர்) தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று (21-10-2022) மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியக் கடற்படையினர் நிதானத்துடனும் கையாள அறிவுரை வழங்குங்கள்” : பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை இந்தியப் பிரதமர்நன்கு அறிவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தியப் பிரதமர் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“இந்தியக் கடற்படையினர் நிதானத்துடனும் கையாள அறிவுரை வழங்குங்கள்” : பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

முன்னதாக இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல், த/பெ. காசிராஜன் என்பவர், இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

“இந்தியக் கடற்படையினர் நிதானத்துடனும் கையாள அறிவுரை வழங்குங்கள்” : பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

சம்பவத்தில் காயைமடைந்த திரு.வீரவேல்,  சிகிச்சைக்காக உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு இலட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories