தமிழ்நாடு

“ஜெய் ஸ்ரீராம் என்ற குரலை அனுமதிக்கலாமா? - வாலை சுருட்டிக்கொண்டு ஓடவேண்டும்” : வெளுத்தெடுத்த திருமாவளவன்!

எந்தப் பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் கொண்ட முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“ஜெய் ஸ்ரீராம் என்ற குரலை அனுமதிக்கலாமா? - வாலை சுருட்டிக்கொண்டு ஓடவேண்டும்” : வெளுத்தெடுத்த திருமாவளவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய வாழும் வரைக்கும் வள்ளுவம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், கலந்து கொண்ட திராவிடர் கழகம் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக் கொண்டார். இதில் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய தொல்.திருமாவளவன், “ஒவ்வொரு நாளும் திருக்குறளுக்கு தெளிவுரை, விளக்கவுரை, பொழிவுரையை பலர் எழுதிக்கொண்டு இருக்கின்றனர். திருக்குறள் என்பது தமிழருக்கான நூல் மட்டுமல்ல; அனைவருக்குமான நூல்.

பல லட்சம் ஆண்டுகள் கடத்தும், வரும் தலைமுறைக்கும் திருக்குறள் பொருந்தும், அதன் பொருள் என்றும் மாறாது. அதனால் தான் அது உலக பொதுமறை என்கிறோம். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் திருக்குறளுக்கு தெளிவுரையும், சில குறக்களுக்கு குரளோவியம் எழுதியுள்ளார்.

“ஜெய் ஸ்ரீராம் என்ற குரலை அனுமதிக்கலாமா? - வாலை சுருட்டிக்கொண்டு ஓடவேண்டும்” : வெளுத்தெடுத்த திருமாவளவன்!

பெரியாரின் பார்வைக்கொண்டு, நடப்பு அரசியல் வைத்து, ஆசிரியர் இந்த நூலை எழுதியுள்ளார். தீவிர ஆன்மிக குடும்ப பின்னணியில் பிறந்து, சாதி, மத இல்லை என்று சொன்னவர் பெரியார். உழைக்கும் மக்களின் குரலாக மாறி, அவர்களின் விடுதலைக்கு போராடியவர் பெரியார்.

வள்ளுவம் தமிழினத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே பொதுவானது, அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது, மனிதகுலம் வாழும் வரை வள்ளும் வாழும். காலத்தால் வழிபடும் மதத்தை கூட மாற்றிக்கொள்வோம், ஆனால் வள்ளுவத்தை மாற்ற முடியாது.

பெரியாருக்கு சில பேர் பூனூல் போட்டு பார்க்கிறார்கள், சில பேர் காவி உடுத்தி பார்க்கிறார்கள். பெரியார் காவியை விரும்பி இருந்தால் சங்கராச்சாரியார்களுக்கு இடம் இருந்திருக்காது. ஈரோட்டில் பிறந்த வள்ளுவர் தந்தை பெரியார், வள்ளுவமும் பெரியாரின் கொள்கைகளும் ஒன்று தான்.

பெரியார் பிறந்த இந்த மண்ணில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற குரலை நாம் அனுமதிக்கலாமா? மதத்தின் பெயரால் தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றிட வித்திடுகிறார்களே அதை நாம் அனுமதிக்க போகிறோமா? ஆர்.எஸ்.எஸ் பேரணி மூலம் சமூகநீதியை பாதுகாக்க போகிறார்களா? ஜெய் ஸ்ரீ ராம் என்ன முழக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கம்.

“ஜெய் ஸ்ரீராம் என்ற குரலை அனுமதிக்கலாமா? - வாலை சுருட்டிக்கொண்டு ஓடவேண்டும்” : வெளுத்தெடுத்த திருமாவளவன்!

புதுச்சேரியில் மூன்று அமைச்சர்கள் அரைக்கால் சட்டை போட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணியில் கலந்து கொள்வது எவ்வளவு வெட்க கேடானது. ஆர்.எஸ்.எஸ்சராசரி ஜனநாயக இயக்கம் இல்லை, அவர்கள் பாசிச இயக்கம். மக்களின் அத்திவாசிய பிரச்சனைக்காக ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தவில்லை.

மதவாத கருத்துகளை இளைஞர்களிடம் புகுத்தி பிரிவினைவாதத்தை ஏற்படுத்த தான் இந்த பேரணியை நடத்த துடிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு 18 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்பு உள்ளது. தீவிர அமைப்பு தொடர்பு உள்ளது என பாப்புலர் பிராண்ட் அப் இந்திய என்ற அமைப்பை தடை செய்த ஒன்றிய அரசு, 18 குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்யவில்லை.

இது போன்ற பேரணிக்கு நாம் ஆதரித்தால் அடுத்த 10 ஆண்டுக்கு பிறகு நாம் கருப்பு, நீலம், சிவப்பு சட்டை அணிய முடியாது. தமிழ்நாடு கருத்தால் முற்போக்கானது, 11 ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் நாம் காட்டுகிற ஒற்றுமையை பார்த்து, அவன் வாலை சுருட்டிக் கொண்டு ஓட வேண்டும்.

“ஜெய் ஸ்ரீராம் என்ற குரலை அனுமதிக்கலாமா? - வாலை சுருட்டிக்கொண்டு ஓடவேண்டும்” : வெளுத்தெடுத்த திருமாவளவன்!

திராவிட இயக்கத்தின் பாசறை தளபதி தான் திமுகவில் இருக்கிறார் அவருக்கு பெயர் ஆ.ராசா. எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்க்கொள்ளக்கூடிய துணிச்சல் கொண்ட முதலமைச்சராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கலவையாக நமது முதலமைச்சர் இருக்கிறார். காங்கிரஸ், இடதுசாரி அமைப்புகளை ஒன்றிணைத்து சந்தித்த தேர்தலில் எல்லாம் வெற்றி பெற்றவர் மு.க.ஸ்டாலின். சமூக நீதிக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை முதலமைச்சர் பார்த்து கொண்டு இருக்கிறார். எரிமலை பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது தெரியும். அது வெடிக்கும் போது தான் அதன் தீவிரம் தெரியும்." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories