செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியான இவருக்கு ரக்ஷயா என்ற இளம் வயது மகள் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்திருக்கும் ரக்ஷயாவுக்கு, சிறுவயதில் இருந்தே அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் பெற வேண்டும் என்று இலட்சியத்தை கொண்டிருந்துள்ளார்.
ஆனால் அவரது குடும்ப வறுமை காரணமாக அதனை பெரிதும் எடுத்துக்கொள்ளாமல் இருக்க நினைத்த இவருக்கு, நாங்கள் இருக்கிறோம் என்று பெற்றோர்கள் கொடுத்த ஊக்கத்தின் மூலம் பகுதி நேர வேலை செய்தும் படித்தும் இதற்காக தன்னை தயார்ப்படுத்தி வந்துள்ளார்.
அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவரது வெற்றியை கெளரவிக்கும் வகையில் அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவித்தனர்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 'Forever Star India Awards' நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகினார். பின்னர் அங்கிருந்து மாநில அளவிலான நடந்த அழகிபோட்டியானது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ரக்ஷயா மிஸ் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வின்னர், ரன்னர் என்று சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கும் தேர்வாகியுள்ளனர்.
தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 'மிஸ் இந்தியா' போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வான போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் வெற்றிபெறுவர் 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்று சாதனை படைப்பர்.
மேலும் வருகிற டிசம்பர் மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வாகிய வின்னர், ரன்னர் என அனைவரும் ஸ்டேஜ் ஷோ செய்ய உள்ளனர். இதில் தேர்வாகும் நபர் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல உள்ளனர். நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ரக்சயா.