தமிழ்நாடு

“தமிழுக்காக தி.மு.க செய்தது என்ன தெரியுமா?” - நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பட்டியலிட்ட முதலமைச்சர்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் 28 தொடர்பு மையங்கள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டன. ஆனால், கடந்த ஒராண்டில் மட்டும் 17 புதிய தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

“தமிழுக்காக தி.மு.க செய்தது என்ன தெரியுமா?” - நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பட்டியலிட்ட முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.09.2022) சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தமிழ்ப் பரப்புரைக்கழகம் தொடக்க விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “'தமிழ்' - வெறும் மொழியல்ல! அது நம் உயிர்!

முத்தமிழறிஞர் - முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர் அவர்கள், தமிழைப்பற்றி அடிக்கடி பெருமையோடு சொல்லுவார்கள். அதனை நான் பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறேன். அதை இந்த நிகழ்ச்சியிலும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

"உளங்கவர் ஓவியமே, உற்சாகக் காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுமிழ் புதுநிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனியத் தென்றலே, பனியே, கனியே, பழரசச் சுவையே, மரகத மணியே, மாணிக்கச் சுடரே, மன்பதை விளக்கே என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தமிழை தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் இருக்காது.

அத்தகைய தமிழ் வாழும் காலமெல்லாம் நின்று நிலைபெறக் கூடிய தமிழ்ப் பரப்புரைக் கழகத்தைத் தொடங்கி வைப்பதை என்னுடைய வாழ்நாளில் கடமையாக மட்டுமல்ல; என்னுடைய வாழ்நாளில் பெருமையாகவும் நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.

'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்' - என்பதை முழக்கமாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு, தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் தொடங்குவது என்பது முழுமுதல் கடமை!

“தமிழுக்காக தி.மு.க செய்தது என்ன தெரியுமா?” - நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பட்டியலிட்ட முதலமைச்சர்!

ஒரு காலத்தில் பேராசிரியர் செந்தமிழ் அரிமா என்று போற்றப்பட்ட இலக்குவனார் அவர்கள், தமிழ்ப் காப்புக் கழகம் தொடங்கினார். அது தமிழைக் காக்க வேண்டிய காலக்கட்டமாக இருந்தது. தமிழை நாம் பாதுகாத்துவிட்டோம்.

இது தமிழைப் பரப்ப வேண்டிய காலக்கட்டம். அதனால் தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கி இருக்கிறோம். தாய்மொழியாம் தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்லும் உயரிய நோக்கம்தான் இதற்குக் காரணம்!

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில், அயலக வாழ் தமிழ் மாணவர்களுக்கு அடிப்படைநிலை முதல் பட்டக்கல்வி நிலை வரை தமிழ்க்கல்வி இணையவழியாக அளிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தொடர்பு மையங்கள் மூலம் இந்த இணையவழி தமிழ்க் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 28 தொடர்பு மையங்கள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டன. ஆனால், கடந்த ஒராண்டில் மட்டும் 17 புதிய தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்ப் புத்தகங்கள் மின்னுருவாக்கம் செய்யப்படுகின்றன.

கணினித் தமிழுக்குத் தேவைப்படும் மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

அண்மையில் கீழடி என்ற விசைப்பலகையும், தமிழிணைய ஒருங்குறி மாற்றியும் நமது அரசால் வெளியிடப்பட்டன.

தமிழ் எழுத்துருக்களைத் தரப்படுத்தி, அவற்றை உலகம் முழுமைக்கும் பொதுமைப்படுத்தி இருப்பது தமிழ் இணையக் கல்விக் கழகத்தினுடைய முக்கிய சாதனை.

இந்த முன்னேற்றங்களில் மாணவர்களின் பங்கேற்பை உறுதிசெய்ய கணித்தமிழ் பேரவைகள் 200 கல்லூரிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

“தமிழுக்காக தி.மு.க செய்தது என்ன தெரியுமா?” - நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பட்டியலிட்ட முதலமைச்சர்!

தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு நமது அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவீர்கள். தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றது முதல் பொருநை அருங்காட்சியகம் அமைப்பது வரை, நாங்கள் தமிழுக்காகவும், தமிழர்களின் தொன்மையினை வெளிக்கொணருவதற்காகவும் முன்னெடுக்கும் முயற்சிகள் பலப் பல.

2022-23-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூபாய் 82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்தாளர்களைச் சிறப்பித்து வருகிறோம்.

ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நிதி உதவி அளித்திருக்கிறோம்.

தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கிறோம்.

நவிமும்பை தமிழ்ச் சங்கக் கட்டடத்திற்கு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.

தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

பாரதியின் நினைவு நூற்றாண்டு தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

திருவள்ளுவர் தொடங்கி அறிஞர்கள் பெயரால் விருதுகள் வழங்கி வருகிறோம்.

புகழ்பெற்ற தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரின் அரிய ஒலி/ஒளிப் பொழிவுகளை இணையதளத்தில் ஆவணப்படுத்தி வருகிறோம்.

இலக்கிய கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.

சில நாட்களுக்கு முன்னால் தமிழகம் வந்த அகில இந்தியத் தலைவர் ஒருவர், "தமிழுக்கு திமுக என்ன செய்தது?" என்று கேட்டுவிட்டுப் போய்விட்டார்? தமிழுக்கு என்ன செய்யவில்லை! என்பதுதான் அவருக்கு நம்முடைய பதிலாக இருக்க முடியும்.

இப்படி ஓராண்டு காலத்தில் தமிழ்த் தொண்டு ஆற்றிய ஆட்சி திமுக ஆட்சி!

இதற்கு மகுடமாகத்தான் தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழின் புகழ்பாடும் கழகம் அல்ல, பேசிக் களிக்கும் கழகம் அல்ல. தமிழை உலகெங்கும் பரப்பக்கூடிய கழகம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories