தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.7 லட்சம் கடன்.. செயின் பறிப்பு கொள்ளையனாக மாறிய வாலிபர்: சிக்கிய பின்னணி?

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.7 லட்சம் கடன்.. செயின் பறிப்பு கொள்ளையனாக மாறிய வாலிபர்: சிக்கிய பின்னணி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (58). இவர் தனது மகளுடன் கடந்த 5ந் தேதி சென்னை மாம்பலத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஆட்டோவில் இருந்து இறங்கி திருமணம் நடைபெற்ற மண்டபத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த வாலிபர் ஒருவர் தமிழ்ச்செல்வி அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.7 லட்சம் கடன்.. செயின் பறிப்பு கொள்ளையனாக மாறிய வாலிபர்: சிக்கிய பின்னணி?

இதனால், தமிழ்ச்செல்வி கூச்சலிட்டுள்ளார். பிறகு உடனே அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பிறகு அவரை அசோக் நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பொறியாளர் சரவணன் (24) என்பது தெரிந்தது. மேலும் இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். நண்பர்கள் சிலரிடம் ரூ7 லட்சம் வரை கடனாக வாங்கியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.7 லட்சம் கடன்.. செயின் பறிப்பு கொள்ளையனாக மாறிய வாலிபர்: சிக்கிய பின்னணி?

இந்நிலையில் தான் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் அவர் செயின் பறிப்பில் ஈடுபட்டு போலிஸில் சிக்கிக் கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories