தமிழ்நாடு

”இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கை”.. கேரள முதல்வரிடம் வழங்கிய முதலமைச்சர்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தபோது, இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

”இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கை”.. கேரள முதல்வரிடம் வழங்கிய முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவனந்தபுரம் சென்றுள்ளார்.

திருவனந்தபுரம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவளத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

”இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கை”.. கேரள முதல்வரிடம் வழங்கிய முதலமைச்சர்!

அப்போது, இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் The Dravidian Model என்ற புத்தகத்தையும் பரிசாக கொடுத்தார்.

”இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கை”.. கேரள முதல்வரிடம் வழங்கிய முதலமைச்சர்!

இதையடுத்து திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

banner

Related Stories

Related Stories