தமிழ்நாடு

International Airportனா சும்மாவா.. மும்பைக்கு பிறகு அதிநவீன வசதியை கொண்டுள்ள சென்னை !- அது என்ன தெரியுமா?

சென்னை விமனநிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்கும் வகையில் கேப்சூல் படுக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

International Airportனா சும்மாவா.. மும்பைக்கு பிறகு அதிநவீன வசதியை கொண்டுள்ள சென்னை !- அது என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் முதல் முறையாக மும்பை சிவாஜி விமானநிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்கும் வகையில் கேப்சூல் படுக்கை அமைக்கப்பட்டது. இது பயணிகளிடையே வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது அது சென்னை விமான நிலையத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சென்னை விமான நிலையத்தில் 4 படுக்கைகள் கொண்ட ' கேப்சூல் ஓட்டல் ' புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது சோதனை அடிப்படையில் 4 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதன் வரவேற்ப்பை பொறுத்து விரிவுபடுத்தப்படும் என்றும் விமான நிலைய நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

International Airportனா சும்மாவா.. மும்பைக்கு பிறகு அதிநவீன வசதியை கொண்டுள்ள சென்னை !- அது என்ன தெரியுமா?

இதில் முதல் 2 மணி நேரத்துக்கு ரூபாய் 600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கு பின்னர் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூபாய் 250 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த படுக்கையில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். அதே நேரம் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் சேர்ந்து தங்க அனுமதிக்கப்படுவர்.

இங்கு உடமைகள் வைப்பதற்கான இடம் , செல்போன் சார்ஜ் செய்ய வசதி , புத்தகம் படிப்பதற்கான வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த படுக்கைகளில் ஒரு விமானத்தில் சென்னை வந்து மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய காத்திருக்கும் ' டிரான்சிட் ’ பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், பயணிகளாக இல்லாதவர்களுக்கு தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories