தமிழ்நாடு

ஒரே ஆண்டில் ரூ.97 லட்சம் மோசடி.. மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரை பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு !

மோசடி வழக்கில் கைதான மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

ஒரே ஆண்டில் ரூ.97 லட்சம் மோசடி.. மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரை பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், புதிய தொழில் தொடங்குவதற்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வங்கியின் கிளை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் உமா மகேஸ்வரி. இவர் மேல் கடந்த கடந்த 2018-19 ஆண்டு காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்து ரூ.97 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

ஒரே ஆண்டில் ரூ.97 லட்சம் மோசடி.. மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரை பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு !

புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், உமா குற்றவாளி என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து உமா மகேஸ்வரியை இடைக்கால பணிநீக்கம் செய்து வேலூர் மத்திய கூட்டுறவு பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவர் மோசடி செய்தது நிரூபனம் ஆனது.

ஒரே ஆண்டில் ரூ.97 லட்சம் மோசடி.. மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரை பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு !

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின்பேரில், வேலூர் வணிக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து உமாமகேஸ்வரியை கடந்த மே மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த உமா மகேஸ்வரி ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், துறை ரீதியான விசாரணை முடிந்து தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories