தமிழ்நாடு

“Cinderella-வின் ஒத்த செருப்பு பத்திரமாக உள்ளது” : பங்கமாய் கலாய்த்த அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்!

“Cinderella-வின் ஒத்த செருப்பு பத்திரமாக உள்ளது” : பங்கமாய் கலாய்த்த அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரையில் நேற்று உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை விமான நிலைய வளாகத்தில் இறுதி மரியாதையை தமிழக அரசின் சார்பில் செலுத்திட நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்றார்.

அப்போது அங்கு கட்சிக் கொடியுடன் கூடியிருந்த பா.ஜ.க.வினர் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். ராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செய்திடும் அரசு நிகழ்ச்சியில் கட்சி நிகழ்ச்சியைப் போன்று ஏன் நடந்து கொள்கிறீர்கள்? என அமைச்சர் கேள்வி எழுப்பிட, உடனே அங்கிருந்த பா.ஜ.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலும், குழப்பமும் ஏற்படுத்தினர்.

“Cinderella-வின் ஒத்த செருப்பு பத்திரமாக உள்ளது” : பங்கமாய் கலாய்த்த அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்!

அமைச்சர் அஞ்சலி செலுத்தி விட்டு ராணுவ வீரரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்ய அவரது சொந்த ஊரான புதுப்பட்டிக்கு செல்ல விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது அங்கு கூடி இருந்த பா.ஜ.க அவரது காரின் மீது செருப்பு வீசியும், கார் கண்ணாடிகளை அடித்தும் தாக்குதலை நடத்திட முற்பட்டனர்.

ஒரு ராணுவ வீரரின் இறப்பில் பா.ஜ.க.வினர் அரசியல் செய்யும் கேவல மான நிலை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் அனைத்துக்கட்சியினர் மத்தியில் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது. மேலும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர் உடலுக்கு இறுதி மரியாதை செய்ய அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறை உள்ளது.

“Cinderella-வின் ஒத்த செருப்பு பத்திரமாக உள்ளது” : பங்கமாய் கலாய்த்த அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்!

மாநில அமைச்சர்கள், மாவட்ட அரசு அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மரியாதை செலுத்திய பிறகுதான் அரசியல் கட்சி தலைவர்கள் செலுத்த முடியும். இதுதான் அரசு நிகழ்ச்சியின் புரோட்டோகால். இந்த விவரம் கூட தெரியாமல் பா.ஜ.கவினர் அரசியல் ஆதாயத்திற்காக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மதுரை லயோலா ஐ.டி.ஐ கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பா.ஜ.க.வினர் தாக்குதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது கூறியதாவது, “பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததியாகியை அடக்கம் செய்வது குறித்து இரண்டு நாட்களாக ராணுவத்தினரை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்.

தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் பேசுவதற்கான சரியான தருணம் இல்லை, பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை, பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும்” என்றார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நேற்று என் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து பேச ஏராளம் உள்ளது. இப்போதைக்கு மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்த Cinderella-வின் ஒத்த செருப்பு பத்திரமாக உள்ளது. அது உங்களுக்கு வேண்டுமானால், என்னுடைய அலுவலர்கள் அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories