தமிழ்நாடு

செருப்பை கொண்டு தேசிய கொடியை அவமதித்த கும்பல்தான் வீட்டில் கொடியேற்ற சொல்கிறது : TRB ராஜா ஆவேசம் !

நமது கொடியை அவமதிக்கும் இந்த கீழ்தரமான கும்பல் தான் இன்று வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற சொல்கிறது என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

செருப்பை கொண்டு தேசிய கொடியை அவமதித்த கும்பல்தான் வீட்டில் கொடியேற்ற சொல்கிறது : TRB ராஜா ஆவேசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு காஷ்மீரில் கடந்த 11ம் தேதி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இவர்களின் இந்த வீர மரணத்திற்குப் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டு அங்கு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டி கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் அமைச்சர்கள் கே.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

செருப்பை கொண்டு தேசிய கொடியை அவமதித்த கும்பல்தான் வீட்டில் கொடியேற்ற சொல்கிறது : TRB ராஜா ஆவேசம் !

முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பா.ஜ.கவினர் திடீரென அவரது காரை வழிமறித்துள்ளனர்.

மேலும் அவர்கள் அமைச்சர் கார் மீது காலணியை வீசி அராஜகமாக நடந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்த போலிஸார் அவர்களைத் தடுத்து அப்புறப்படுத்தினர். பிறகு அமைச்சர் அங்கிருந்து காரில் சென்றார். இப்படி துக்க வீட்டில் அராஜகமாக நடந்து கொண்ட பா.ஜ.க-வினர் 5 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து பா.ஜ.க-வினரின் இந்த அராஜக நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா," மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசின் அமைச்சர் செல்லும் தேசியக் கொடி பொருந்திய கார் மீது தாக்குதல் நடத்தி நமது கொடியை அவமதிக்கும் இந்த கீழ்தரமான கும்பல் தான் இன்று வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற சொல்கிறது" என தெரிவித்துள்ளார். இவரைப்போன்று பலரும் பா.ஜ.க-வினரின் இந்த கீழ்தரமான செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories