தமிழ்நாடு

நண்பன் பேசாததால் மன உளைச்சல்.. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு: பெற்றோர் அதிர்ச்சி!

வளசரவாக்கத்தில் நண்பர் பேசுவதைத் தவிர்த்ததால் இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பன் பேசாததால் மன உளைச்சல்.. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு: பெற்றோர் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்து வளசரவாக்கம், பழனியப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணராவ். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி (25), பட்டப்படிப்பு முடித்த இவர் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் இரவு தனது அறைக்குச் சென்ற அரிதா ராஜேஸ்வரி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது பெற்றோர் உள்ளே சென்று பார்த்தபோது, மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

நண்பன் பேசாததால் மன உளைச்சல்.. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு: பெற்றோர் அதிர்ச்சி!

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அரிதா ராஜேஷ்வரி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், அரிதா ராஜேஸ்வரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மதுமோகன் என்பவரிடம் நண்பராகப் பழகி வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக அரிதா ராஜேஸ்வரியுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன மிகுந்த மன உளைச்சலிலிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

நண்பன் பேசாததால் மன உளைச்சல்.. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு: பெற்றோர் அதிர்ச்சி!

மேலும், தற்கொலைக்கு முன்பு அரிதா ராஜேஷ்வரி எழுதிய தற்கொலை கடிதமும் போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
banner

Related Stories

Related Stories