தமிழ்நாடு

“தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை” : பக்கத்து வீட்டு இளைஞர் கைது - விசாரணையில் பகீர் தகவல்!

திருட வந்த இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த திருடன் கைது செய்யப்பட்டுள்ள சிம்மம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை” : பக்கத்து வீட்டு இளைஞர் கைது - விசாரணையில் பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் முல்லா. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு அதேபகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு முல்லா வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேஷ்குமார் என்ற இளைஞர் முல்லா வீட்டிற்கு திருட வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த பணத்தை திருடிய பின் செல்லாமல், அறையில் குழந்தைகளோடு தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பார்த்துள்ளார்.

“தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை” : பக்கத்து வீட்டு இளைஞர் கைது - விசாரணையில் பகீர் தகவல்!

பின்னர் அவர் அருகே சென்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளார். அப்போது விழித்துக்கொண்ட அந்த பெண் அலறியுள்ளார். பெண்ணின் சத்தத்தை கேட்டு வந்த முல்லா, மகேஷை பிடிப்பதற்குள் சுவர் மீது ஏறி குதித்து தப்பி விட்டார்.

“தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை” : பக்கத்து வீட்டு இளைஞர் கைது - விசாரணையில் பகீர் தகவல்!

இந்த நிலையில், மறுநாள் காலை, இந்த சம்பவம் குறித்து முல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மகேஷ்குமாரை தேடி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பக்கத்து வீட்டில் திருட வந்த போது, பெண்ணுக்கு பாலியல் கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories