தமிழ்நாடு

"கனியாமூர் பள்ளி விடுதி அனுமதி பெறாமல் இயங்கியது.. -குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் குற்றச்சாட்டு !

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் உள்ள விடுதி அனுமதி பெறாமல் இயங்கியது. முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும் என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

"கனியாமூர் பள்ளி விடுதி அனுமதி பெறாமல் இயங்கியது.. -குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் குற்றச்சாட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விடுதியில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.

இதில் போராட்டக்காரர்கள் பள்ளிக்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனங்கள் மற்றும் பள்ளிக்குள் இருந்த பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் அடித்து சேதப்படுத்தி தீ வைத்து எரித்தனர்.

"கனியாமூர் பள்ளி விடுதி அனுமதி பெறாமல் இயங்கியது.. -குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் குற்றச்சாட்டு !

இதனால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. இதனை அடுத்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் அப்பகுதியில் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி சுட்டும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலை தளத்தில் பதிவிட்ட பலரை தமிழகமெங்கிலும் போலிஸார் கைது செய்து வருகின்றனர். அதன்படி ஏராளமானோர் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

"கனியாமூர் பள்ளி விடுதி அனுமதி பெறாமல் இயங்கியது.. -குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் குற்றச்சாட்டு !

இந்த நிலையில், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை சேர்ந்தவர்கள் இன்று கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரிடம் பள்ளி மாணவி உயிரிழப்பு குறித்த விபரங்களை கேட்டுறிந்த அவர்கள், பின்னர் கனியாமூர் தனியார் பள்ளி வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, “மாணவி இறந்த தனியார் பள்ளியில் விடுதி நடத்த அனுமதி வாங்கவில்லை. முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும்” என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories