தமிழ்நாடு

வலிப்பு நோயால் சாலையில் துடிதுடித்த இளைஞர்.. முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய போலிஸ்: நெகிழ்ச்சி சம்பவம்

சென்னையில் வலிப்பு வந்து சாலையில் விழுந்து துடித்த இளைஞருக்கு போலிஸார் முதலுதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலிப்பு நோயால் சாலையில் துடிதுடித்த இளைஞர்.. முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய போலிஸ்: நெகிழ்ச்சி சம்பவம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடையாறு பகுதியில் உள்ள GRT கடை உள்ளது. இந்த கடையில் அருகே சாலையில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அப்போது, அந்த இளைஞரின் கை மற்றும் கால்கள் வலிப்பு ஏற்பட்டுத் துடிதுடித்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அவரை நெருங்கிப் பார்ப்பதுக்கு அச்சப்பட்டுள்ளனர்.

வலிப்பு நோயால் சாலையில் துடிதுடித்த இளைஞர்.. முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய போலிஸ்: நெகிழ்ச்சி சம்பவம்

இதையடுத்து அங்கு ரோந்து பணியிலிருந்து போலிஸார் இதைப்பார்த்து உடனே அந்த இளைஞருக்கு முதலுதவி செய்துள்ளனர். பிறகு 108 ஆம்புலன் மருத்துவர்களை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.

அப்போது அந்த இளைஞர் நலமுடன் இருப்பதாகவும் அருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நான் 2 நாட்களாக சாப்பிடவில்லை என போலிஸாரிடம் அந்த இளைஞர் கூறியுள்ளார்.

வலிப்பு நோயால் சாலையில் துடிதுடித்த இளைஞர்.. முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய போலிஸ்: நெகிழ்ச்சி சம்பவம்

இதையடுத்து போலிஸார் அவருக்கு இளநீர் மற்றும் உணவு வாங்கி கொடுத்து அந்த இளைஞர் செல்லும் இடத்திற்கு பத்திரமாக வழி அனுப்பிவைத்தனர். போலிஸாரின் இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories