தமிழ்நாடு

“சிதம்பரம் கோயில் நலனில் அக்கறை உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்” : அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

“சிதம்பரம் கோயில் நலனில் அக்கறை உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்” : அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடலூர் மாவட்டம், சிதம்பரம் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வரும் 20, 21ம் தேதிகளில் விசாரணைக்குழுவிடம் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, நாளிதழ்களில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 23 மற்றும் 33- ன் படி ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிடம்,

திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் (Persons having interest as per Section 6(15)) தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வருகின்ற 20/06/2022 மற்றும் 21/06/2022 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை துணை ஆணையர்/ ஒருங்கிணைப்பாளர், விசாரணைக் குழு, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண்.8 ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலூர்- 607001 என்ற முகவரியில் நேரில் அளிக்கலாம். அஞ்சல் மற்றும் vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 21/06/2022 மாலை 03.00 மணிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories