தமிழ்நாடு

மாணவிகளிடம் வீடியோ காலில் ஆபாசப் பேச்சு.. வீடியோ பரவியதால் பரபரப்பு - பா.ஜ.க பிரமுகர் கைது: பின்னணி என்ன?

அருப்புக்கோட்டையில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி தாளாளர் கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளிடம் வீடியோ காலில் ஆபாசப் பேச்சு.. வீடியோ பரவியதால் பரபரப்பு - பா.ஜ.க பிரமுகர் கைது: பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி விருதுநகர் சாலையில் செயல்பட்டு வந்தது.

பின்னர் தீ தடுப்பு உள்ளிட்ட முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என கூறி 2017 ஆம் ஆண்டு கல்லூரியை அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அதே ஆண்டில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையுடன் முறையான அனுமதி பெற்று தெற்கு தெருவில் வாடகை கட்டிடத்தில் கல்லூரி இயங்கத் துவங்கியது. இக்கல்லூரியில் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தான் அதிகம் பயன் வருகின்றனர்.

இந்நிலையில் இக்கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் (முன்னாள் பா.ஜ.க சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர்) கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது அந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடம் திடீரென பரவியதால் கல்லூரி மாணவிகள் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் இதுதொடர்பாக எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவிகளிடம் வீடியோ காலில் ஆபாசப் பேச்சு.. வீடியோ பரவியதால் பரபரப்பு - பா.ஜ.க பிரமுகர் கைது: பின்னணி என்ன?

இந்நிலையில், இதனைக் கண்டித்து கல்லூரிக்கு வந்த மாணவிகள், கல்லூரி மூடி இருந்ததால் தர்ணாவில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அங்கு போலிஸார் குவிக்கப்பட்டனர். மேலும் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை நகர் காவல்நிலைய போலிஸார் கைது செய்தனர். எனினும் கல்லூரி மாணவிகள் தங்களின் படிப்புக்கும் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கல்லூரி கட்டணத்தையும் சான்றிதழ்களையும் திரும்பி தர வலியுறுத்தி திடீரென பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மறியலில் ஈடுபட்டதால் மதுரை விருதுநகர் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி சகாயஜோஸ், வட்டாட்சியர் அறிவழகன், நகர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து வீடியோ காலில் மாணவியிடம் நிர்வாணமாக பேசிய கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை பாதிக்கப்பட்ட அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலிஸார் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு உரிய நிவாரணம் பெற அதிகாரிகள் அறிவுறுத்தினர். பாலியல் குற்றச்சாட்டில் தனியார் கல்லூரி சேர்மன் கைது செய்யப்பட்டு மாணவர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories