தமிழ்நாடு

பாலியல் உறவுக்கு இணங்கும்படி தாய், மகளுக்கு கத்தி முனையில் மிரட்டல்.. அதிரடி காட்டிய மாதவரம் போலிஸ்!

வீட்டில் தனியே இருந்த தாய் மற்றும் மகளை கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

பாலியல் உறவுக்கு இணங்கும்படி தாய், மகளுக்கு கத்தி முனையில் மிரட்டல்.. அதிரடி காட்டிய மாதவரம் போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே 52 வயது பெண் தன் மகளுடன் தனியே வசித்து வருகிறார்.

கடந்த மாதம் 19ஆம் தேதி நள்ளிரவில் இவரின் வீட்டின் கதவை மர்ம நபர் எட்டி உதைத்து திறந்து தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி தாய், மகள் இருவரில் யாராவது ஒருவரை பாலியல் உறவுக்கு இணங்கும்படியும் இல்லாவிட்டால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

உடனே சுதாரித்துக் கொண்ட மூதாட்டியின் மகள் வெளியே சென்று கூச்சலிட்டார் இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர் அக்கம்பக்கத்தினர் வந்ததால் இருவரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் அளித்ததின் பேரில் மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அதில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் சென்னை கொடுங்கையூர் பகுதி என் எஸ் கே தெருவில் அரிசி கடை நடத்தும் ராஜேஷ் வயது 26 என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories