தமிழ்நாடு

வயலில் வேலை செய்த 65 வயது மூதாட்டியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: பிரபல ரவுடியை கைது செய்து போலிஸ் விசாரனை!

புதுச்சேரியில் வயலில் வேலை செய்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை இரண்டு மாதங்களுக்கு பிறகு போலிசார் கைது செய்தனர்.

வயலில் வேலை செய்த 65 வயது மூதாட்டியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: பிரபல ரவுடியை கைது செய்து போலிஸ் விசாரனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி அருகே பாகூர் தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயலில் வேலை செய்து கொண்டிருந்த 65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

இதுகுறித்து பாகூர் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவத்தில் கடலுார் மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (23) ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும் சிலம்பரசன் மீது கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

சம்பவத்தன்று திருட்டு வழக்கில் ஜாமினில் வந்த சிலம்பரசன், கடலுார் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, ஆராய்ச்சிக்குப்பம் அருகே மது குடித்துள்ளான். பின்னர் நடந்து சென்றபோது, வயலில் வேலை பார்த்த மூதாட்டியிடம் மொபைல் போன் பறிக்க முயன்றுள்ளான், அவர் தர மறுக்கவே தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து நேற்று கடலூர் பகுதியில் சுற்றி திரிந்த சிலம்பரசனை பாகூர் தனிப்படை போலிசார் கைது கைது செய்து, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மீன்சுருட்டியில் பிப்ரவரி மாதம் மூன்று மூதாட்டிகள், மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இச்சம்பவங்களில் சிலம்பரசனுக்கு தொடர்பு உள்ளதா என ஜெயங்கொண்டம் போலிசார் நேற்று பாகூர் காவல் நிலையத்திற்கு வந்து, சிலம்பரசனிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

banner

Related Stories

Related Stories