தமிழ்நாடு

மனைவியின் ஆண் நண்பர் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவன் : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!

மனைவியின் நண்பரை கொடூரமாகக் கொன்ற கணவனை போலிஸார் கைது செய்தனர்.

மனைவியின் ஆண் நண்பர் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவன் : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி பிரியா. இவருக்கும் தமிழரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த அவரது கணவர் மனைவியைக் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து தமிழரசனுடன் பழகிவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பிரியா தமிழரசன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த கணவர் சசிகுமார் ஆத்திரமடைந்துள்ளார். பின்னர் அவரது வீட்டிற்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த தமிழரசன் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories