தமிழ்நாடு

"நீட் தேர்வை விட கொடுமையானது தேசிய கல்விக்கொள்கை": அமைச்சர் க.பொன்முடி அறிக்கை!

நீட் தேர்வைவைட கொடுமையானது தேசிய கல்விக்கொள்கை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

"நீட் தேர்வை விட கொடுமையானது தேசிய கல்விக்கொள்கை": அமைச்சர் க.பொன்முடி அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வரைவு தேசிய உயர்கல்வித் தகுதிகள் கட்ட மைப்பு குறித்த தமிழக அரசின் நிலைப்பாடுதொடர்பான உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்களின் அறிக்கை வருமாறு:-

தேசியக் கல்விக் கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப்பாடு கோரும் ஒன்றிய அரசின் மின்னஞ்சல் தமிழக அரசால் 18.02.2022 அன்று பெறப்பட்டது. இந்நேர்வு குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்தினை பெற்று விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு அரசிற்கு குறைந்தகால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, வரைவு செய லாக்கத் திட்டம் (Draft Implementation Plan) குறித்து ஆய்வு செய்து, அரசின் நிலைப்பாடு விரைவில் அனுப்பப்படும்.

அனைவருக்கும் கல்வியை சீர்குலைக்கும் செயல்!

தேசியக் கல்விக் கொள்கை, ’அனைவருக்கும் கல்வி’ என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர் குலைக்கும் வகையில் இருப்பதால் தமிழக முதல்வர் தளபதி அவர்களின் சீரிய தலைமையில் நடை பெறும் தமிழக அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பட்டப்படிப்பு பயிலமுதுநிலைத் தகுதிகளை (entry requirement) மாணவர்கள் நிறைவுசெய்திருக்க வேண்டுமென்று இவ்வரைவு கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின்கொள்கைக்கு ஏற்புடையதல்ல. மருத்துவம், பொறியியல் படிப்புகளில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் நுழைய (பயில) நுழைவுத்தேர்வு தடையாக இருந்த காரணத்தால், அன்றைய முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ரத்து செய்யப்பட்டது. இலவசக்கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு,தேவையான அளவு கல்லூரிகளும், அவற்றில் போதுமான அளவு வேலைவாய்ப்பிற்கேற்ற பாடப்பிரிவுகளும் அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட சமூகநீதி உத்தரவுகளால் அனைத்து தரப்பு மாணவர்களுக்குமான கல்வி என்பது தமிழக அரசால் உறுதிப்படுத்தப்பட்டது.

ஏழை மாணவர்களின் உயர்கல்வியை தடுக்கும்!

அதுபோல, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயில நுழைவுத்தேர்வு கட்டாயமென்பதை தி.மு.க. தொடர்ந்து கண்டித்து வருகிறது. ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதை தடுக்கும் நோக்கில் எடுக்கப்படும் இந்நடவடிக்கை கட்டாயமாக தடுக்கப்பட வேண்டும்.

எனவே, தற்போதுள்ள 10+2+3 என்ற கல்விமுறையை மாற்றக் கூடா தென்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். ஆனால், தற்போதைய தேசியக் கல்விக் கொள்கை யின்படி மூன்றாண்டு பட்டப்படிப்பில் முதலாண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், இரண்டாமாண்டில் நிறுத்தினால் பட்டயம், மூன்றாமாண்டு முடித்தால் பட்டம் போன்றவை இடைநிற்றலை ஊக்குவிக்க செய்யுமென்பதால் அதனை தமிழ்நாடு அரசு வன்மையாக எதிர்க்கிறது.

தமிழக கல்விக் கொள்கைக்கு முரணானது!

மேலும், மூன்றாண்டு இளநிலைப் பட்டப்படிப்பே தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கையில் இந்த உயர்கல்வி வரைவுத் திட்டம் நான்காண்டு இளநிலைப் பட்டத்தை பரிந்துரைக்கிறது. இது மாணவர்களின் கல்வி பயிலும்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கிறது. மற்றொருபுறம், முதல் மூன்றாண்டுகளில் சராசரி ஒட்டுமொத்த தரப்புள்ளி 7.5-க்கும் குறை வாக பெற்றிருப்போர் நான்காமாண்டு செல்ல இயலாது என்பது இயற்கை நீதிக்குப் புறம்பானதாகும். இதுவும் தமிழக அரசின் கல்வி கொள்கைக்கு முரணானதாகும்.

இடை நிற்றல் அதிகரிக்கும்!

மேற்கண்ட வரைவுக்கொள்கையின்படி, ஒருபருவத்தின் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சியுறாத மாணவர்கள் அடுத்த பருவத்தில் அனுமதிக்கப்படாமல் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டால், மாணவர்களின் கற்கும் காலம் நீட்டிக்கப்படுவ துடன் அவர்களுடைய பயிலும் ஆர்வம் குறைந்து இடைநிற்றல் அதிகரிக் கும் என்பதால் தமிழ்நாடு அரசு அதனை எதிர்க் கிறது. ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த விரும்பும் புதியமுறை, நீட் தேர்வுமுறையை விட கொடுமையானது. இது மாணவர்களை கல்விக் கூடங்களிலிருந்து வெளியேற்ற வகைசெய்யும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

கல்வி அமைப்பையே சீர் குலைக்கும் செயல்!

நூறு ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே சீர் குலைக்கும் செயல். ஏழை, எளிய விளிம்பு நிலை மாணவர்களின் நலனுக்கு எதிரானது. மேலும், மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கென குழு ஒன்று அமைக்கப்படும் என்ற தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்கஅதற்கான பணிகளும்நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories