தமிழ்நாடு

சென்னை உட்பட 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு என அறிவிப்பு: எங்கெங்கு தெரியுமா? விவரம் இதோ!

தமிழ்நாட்டில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை உட்பட 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு என அறிவிப்பு: எங்கெங்கு தெரியுமா? விவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முழுவதும் நேற்று 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு நேற்று காலை தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை உட்பட 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு என அறிவிப்பு: எங்கெங்கு தெரியுமா? விவரம் இதோ!

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அறிக்கையில், சென்னையில் 2, மதுரையில் 1, அரியலூரில் 2, திருவண்ணாமலையில் 2 என 7 வாக்குச்சாவடிகளில் நாளை (21.02.2022) மறுவாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மறுவாக்குப்பதிவின் கடைசி ஒரு மணி நேரம், அதாவது, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை பதிவு செய்யப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories