தமிழ்நாடு

”இனி மின் கசிவு, மின் விபத்து ஏற்படுமோ என அச்சம் வேண்டாம்” - நற்செய்தி கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி!

திடீரென மின் கசிவு, மின் விபத்து ஏற்பட்டாலோ தானியங்கி முறையில் டிரான்ஸ்ஃபார்மர் ஆஃப் ஆகும்படியான முறை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

”இனி மின் கசிவு, மின் விபத்து ஏற்படுமோ என அச்சம் வேண்டாம்”  - நற்செய்தி கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் இயக்குநர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் 26,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7,40,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் 8,950 மின் மாற்றிகள் அமைக்கும் பணியில் 8,021 மின் மாற்றிகள் அமைக்கபட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் பில்லர் பெட்டிகள் எளிதில் பழுதடைந்து விடுவதால் அவர்களை உயர்த்தி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட 340 பில்லர் பெட்டிகள் 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் முழுவதும் கணினி மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் ஒரு கோடி மின் இணைப்பு தாரர்களின் தொடர்பு எண்கள் மட்டுமே இருந்ததாகவும் தற்போது 2 கோடியே 99 லட்சம் மின் இணைப்புதாரர்களின் தொடர்பு எண்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ”எங்காவது திடீரென மின் கசிவு ஏற்பட்டாலோ, மின் விபத்து ஏற்பட்டாலோ தானியங்கி முறையில் டிரான்ஸ்ஃபார்மர் ஆஃப் ஆகும்படியான முறை அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்மூலம் மின் கசிவு ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று டிரான்ஸ்ஃபார்மர்  நிறுத்தவேண்டிய அவசியம் இருக்காது என்றும் தானியங்கி முறையில் டிரான்ஸ்ஃபார்மர் ஆஃப் ஆகிவிடும். மேலும் விரைவில் சென்னை 100% புதைவட கம்பிகள் பொருத்திய நகரமாக மாற்றப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories