தமிழ்நாடு

குழந்தையை கடித்துக் குதறிய நாய்கள்..60 தையலுடன் மருத்துவமனையில் சிகிச்சை: தாய் வெளியிட்ட உருக்கமான வீடியோ

கடலூரில் இரண்டு குழந்தைகளைத் தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை கடித்துக் குதறிய நாய்கள்..60 தையலுடன் மருத்துவமனையில் சிகிச்சை: தாய் வெளியிட்ட உருக்கமான வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குழந்தை தனது தாத்தாவுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள கோல்டன் பீச் பூங்காவிற்குச் சென்றுள்ளது.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சூழ்ந்துக் கொண்ட தெருநாய்கள், குழந்தையை கடித்துக் குதறியுள்ளன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி குழழ்ந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காகப் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு 60 தையலுடன் குழந்தை சிகிச்சைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளின் தாய் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெயிட்டுள்ளார். அதில்"தனது குழந்தைக்கு ஏற்பட்டதைப் போன்று வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்ளை பிடிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories